Sunday, November 9, 2014

வாஸ்து பார்ப்பது உண்மையா?


வாஸ்து பார்ப்பது உண்மையா?
அதன் நோக்கம் என்ன?
வாஸ்து என்பது நம் முன்னோர்கள் தங்கள் அறிவியல் நுண்ணறிவால் கண்டுபிடித்த ஒரு கட்டுமான சாஸ்திரம்.
ஆனான் தற்போது வஸ்து பணம் பொருட்டு பலவிதமாக திரித்தும்,பொய்யாகவும் பிரச்சாரம் செயப்படுகிறது.
எப்போது வாஸ்து பார்ப்பார்கள்?
----------------------------------------------------
பொதுவாக பண்டைய காலங்களில் புதிதாக ஒரு ஊர் நிர்மாணித்தால் அதற்க்கு வாஸ்து பார்பார்கள்.
உதாரணமாக வடகிழக்கு சனி மூளை எனப்படும் இடத்தில் திசையில் பொதுவாக நீரோட்டம் அதிகம் இருக்கும் ஆதலால் அங்கு குளம்,ஏறி போன்ற நீர்நிலைகளை அமைப்பர்.சனிமூலை தாழ்வான பகுதி.ஆதால் அங்கு நீர் தேங்கும்.அதற்க்கு நேர் எதிரான திசை தென்மேர்க்காகும்.அது மேடான பகுதி.ஆதலால் மழை காலங்களில் அங்கு நீர் தேங்க வாய்ப்புகள் குறைவாதலால் அத்திசையில்தான் உழவு செய்வர்.
ஆக வாஸ்து என்பது மிக முக்கியமாக ஊர் நிர்மாணத்திற்காக இயற்றப்பட்ட அறிவியல் கட்டுமான நூல்.
வீடு கட்டும்போது வஸ்து பார்ப்பது எதற்கு?
-------------------------------------------------------------------------
முன்கூரினார்போல தாழ்வான பகுதுயாதளால் வடகிழக்கில் நீர்நிலைகள் இருக்குவேண்டும்.
தென்மேற்கு திசை வாயு திசை எனப்படும்.நம் நாட்டு பூகோள அமைப்பாவது தென்மேற்கில் இருந்து காற்று வீசும் நமக்கு பருவமழையும் தென்மேற்கு பருவமழை தான்.ஆகையால் காற்று பலமாயுள்ள இடத்தில் சமையல் அரை இருக்ககூடாது.
அதற்க்கு நேரெதிர் திசை தென்கிழக்கு திசை அக்னிமூலை எனப்படும்.காற்று குறைவாக இருக்கும் அவ்விடம் நெருப்பு எரியூட்ட ஏற்ற இடம்.
அது போன்று தான் வீடுகளுக்கு வஸ்து பார்க்கும் முறை துவங்கியது.
எங்கு வாஸ்து பார்க்க அவசியம் இல்லை?
-----------------------------------------------------------------------
1000 வாசல்கள் உள்ள ஊரில் வாஸ்து பார்க்க வேண்டாம் என்றும்,சூரிய கிரணங்கள் நேரடியாக வீட்டில் விழும் பட்சத்தில் அந்த வீட்டில் வாஸ்து தோஷம் அண்டாது என்றும் தான் வாஸ்து சாத்திரம் சொல்கிறது.அதை யாரும் சொல்லக்காணோம்.
தயவு செய்து யாரும் வஸ்துக்கள், வச்துமீன் , வச்துபரவை , வச்துபோம்மை,வஸ்துசெடி போன்றவற்றை வங்கி ஏமாறவேண்டாம்.
நம் வாழ்கையை இறைவன் நன்றாகத்தான் தீர்மானம் செய்து வைத்துள்ளான்.அவன் இயக்கத்தின் படி நடந்து வாழ்வை சிறப்பாக வாழ்வோம்.
நிம்மதி வாஸ்துவிலோ,ராசிகளிலோ,ராசிக்கல் மோதிரத்திலோ இல்லை.நிம்மதி நம்மிடம் தான் உள்ளது.

1 comment: