Tuesday, November 25, 2014

நுனிப்புல் மேயாதீங்க!

நுனிப்புல் மேயாதீங்க! அறிவை வளர்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு !! மிஸ் பண்ணிடாதிங்க !!
சகலகலா வல்லவனாக வேண்டும் எனும் ஆர்வம் இன்று பலரிடம் காணப்படுகிறது. ஒரு விஷயத்தைக் கற்க ஆரம்பிப்பார்கள். நண்பனிடம் இன்னொரு திறமை இருக்கும், அதை நோக்கி மனம் தாவும். அதைக் கற்க ஆரம்பிக்கும்போது இன்னொன்றில் மனம் லயிக்கும். அதன்பின் வேறொன்றுக்குத் தாவும். கடைசியில் நமது ‘ஸ்பெஷாலிட்டி’ எது என்பது பிரித்தறிய முடியாக் கூட்டாஞ்சோறாகிப் போகும்.
கொஞ்சம் ஆற அமர உட்கார்ந்து உங்களுடைய ‘பெஸ்ட்’ திறமை எதில் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சட்டென ஒரு விஷயம் உங்களுக்குத் தோன்றினால், உண்மையிலேயே உங்களுடைய திறமையை நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். அந்தத் திறமை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கவிதை எழுதுவதாகவோ, காபி போடுவதாகவோ… எதுவாகவும் இருக்கலாம்.
ஒருவேளை நீங்கள் யோசிக்கும்போது ஒரு விஷயமும் உங்களுக்குப் பிடிபடாமல் போனால் விழித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் திறமைகளை எல்லாம் பட்டியலிட்டு எதில் நீங்கள் வல்லவர், எதில் நீங்கள் சுமார், எது உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயம் என வரிசைப்படுத்துங்கள். அந்தப் பட்டியலைப் பார்க்கும்போது ‘இதுதான் என்னோட ஸ்பெஷாலிட்டி’ என உங்களுக்கே ஒரு விஷயம் நிச்சயம் பிடிபடும்.
உங்களுடைய உண்மையாக விருப்பம் இருக்கும் விஷயத்தில் உங்களுக்கு இயல்பாகவே திறமையும் இருக்கும். அந்த ஏரியாவில் நீங்கள் மூச்சடக்கி, முக்குளித்து முத்தெடுக்க வேண்டும். அது நிச்சயம் உங்களை வெற்றிகளின் உச்சியில் கொண்டு சேர்க்கும்.
நீங்கள் தேர்வு செய்யும் விஷயம் குறித்த தகவல்களையும், விஷயங்களையும் தேடித் தேடிப் படிப்பது அடுத்த கட்டம். வெறுமனே வாசிப்பது மட்டுமல்லாமல் அது குறித்த சிந்தனைகளிலும் அதிகம் ஈடுபடுங்கள். குறிப்பாக ஒரு பாடகராக மாறுவது உங்கள் லட்சியம் என்றால் அது குறித்த நூல்களைப் படியுங்கள். பாடகர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள். அவை உங்களுக்குத் தூண்டுதலாய் மாறும்.
அதே துறையில் விருப்பமுடைய நண்பர்களைக் கொண்டிருப்பது அடுத்த தேவை. அந்தத் துறையில் திறமை மிக்கவர்கள் நண்பர்களாகக் கிடைத்தால் நல்லது. யாராவது ஒரு நல்ல நபர் வழிகாட்டியாய்க் கிடைத்தால் ரொம்ப ரொம்ப நல்லது. நல்ல உற்சாகமூட்டக்கூடிய வழிகாட்டி, லட்சியப் பாதையில் உங்களைச் சுமந்து செல்லும் ஒரு குதிரையைப் போன்றவர்.
இன்றைக்கு இணையம் பல்வேறு குழுக்களையும், சமூக வலைத்தளங்களையும் நமக்கு முன்னால் நீட்டுகிறது. இசைப் பிரியர்கள் அதற்கான குழுக்களில் இணையலாம், தையல் பிரியர்கள் அதற்கான குழுக்களில் இணையலாம். இங்கே அரட்டைகளைத் தவிர்த்த உருப்படியான பல விஷயங்கள் பரிமாறப்படும்.
‘உங்களுக்குப் பிடித்தமான விஷயமே வேலையாகிப் போனால் வாழ்க்கையில் ஒருநாள் கூட வேலை செய்யும் உணர்வே வராது’ என்கிறார் கன்பூஷியஸ்.
எதை அபரிமிதமாக நேசிக்கிறோமோ அது நமது உணர்வுகளில் பின்னிப் பிணைந்து நம்மை மாபெரும் வெற்றியாளராய் கொண்டு சேர்க்கும். வின்சென்ட் வான்கா எல்லாவற்றையும் விட அதிகமாய் ஓவியத்தை நேசித்தார். ஓவியம் வரைய அமர்ந்தால் சாப்பிடவே மறந்து போய் விடுவாராம். தனது தூரிகையிலிருந்து விழும் ஒவ்வொரு துளியையும் நேசித்ததால்தான் இன்று ஓவிய உலகம் அவரை கொண்டாடுகிறது.
உங்களுக்குப் பிரியமான வேலையை கண்டுபிடிப்பது ஒன்றும் கம்ப சூத்திரமில்லை. எந்த வேலை உங்களை மெய்மறக்க வைக்கிறதோ, எந்த வேலை செய்யும் போது சோர்வே ஏற்படவில்லையோ, எந்த வேலை உங்களை உற்சாகம் கொள்ள வைக்கிறதோ அதுவே உங்களுடைய கனவு வேலையாய் இருக்கலாம்.
கனவு வேலைக்குள் காலெடுத்து வைத்தபின் உடனடியாகப் பயன் கிடைக்கவில்லையே எனும் கவலையே இருக்கக் கூடாது. விதைகள் உடனடியாக மரமாகி விடுவதில்லை. முளை விட்டதும் கனிகளைத் தேடுவதிலும் நியாயமில்லை. ஒவ்வொரு வளர்ச்சியையும் கவனமுடன் கவனித்து, முன்னேறிச் செல்கிறோம் எனும் நிலையை மட்டும் உறுதிப்படுத்திக் கொண்டாலே போதுமானது.
யோ அலை என அலைந்தார். ஏகப்பட்ட உணவகங்களில் அதை நிராகரித்தார்கள். ஆனால் அவரோ சிக்கன் தயாரிப்பில் சாதனையாளராய் மாற வேண்டும் எஹார்லண்ட் டேவிட் சாண்டர்ஸ் என்றொருவர் இருந்தார். சிக்கன் சமைப்பதில் கில்லாடி. தனது சிக்கன் செய்முறையை எடுத்துக்கொண்டு அலைனும் ஒரே பிடிவாதத்தோடு முயன்றார். கடைசியில் வென்றார். அதுதான் இன்று உலகெங்கும் கொடிகட்டிப் பறக்கும் கே.எப்.சி. (KFC )சிக்கனின் வரலாறு!
‘எதில் இருக்கிறாயோ, அதில் சிறப்பானவனாய் இரு’ என்கிறார் ஆபிரகாம் லிங்கன். பிரபல எழுத்தாளர் மால்கெம் கிளாட்வெல் தனது தியரியில் சொல்லும் விஷயம் கவனிக்கத்தக்கது. ஒரு மனிதன் ஒரு துறையில் வல்லவனாக விளங்க நிறையப் பயிற்சி தேவைப்படுகிறது. 10 ஆயிரம் மணி நேரம் ஒரு மனிதன் ஒரு செயலுக்காக அர்ப்பணிக்கும் போது அவன் அதில் உச்சத்தைத் தொட்டு விடுகிறான் என்கிறார் அவர்.
அதென்ன 10 ஆயிரம் மணி நேரம்? வாரம் 20 மணி நேரம் வீதம் பத்து ஆண்டுகள். அதுதான் அவரது கணக்கு. ஒரு கால்வாசி உயரத்தை எட்டிப் பிடிக்க இதில் கால்வாசி நேரம் ஆகும், அதாவது 2 ஆயிரத்து 500 மணி நேரம். உச்சத்தை எட்டிப் பிடிப்பதொன்றும் எளிய வேலையல்ல, அதற்கு ஏகப்பட்ட உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
ஒரு துறையில் நிபுணர் ஆகி விட்டால் அந்தத் துறையில் உங்களுடைய இருப்பை பலப் படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக பளீரடிக்கும் வைரமானாலும் அதைப் பத்தாயத்தில் போட்டு வைத்தால் யாருக்குமே தெரியாமல் போய்விடும். எனவே இருக்கும் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை வரவேற்கவேண்டும்.
ஒரு விஷயத்தில் கில்லாடியானதும் உங்களுடைய உழைப்பு அத்துடன் முடிந்துபோய் விடுவதில்லை. அந்த இடத்தைத் தக்க வைக்கத் உங்கள் கவனத்தை அதன் மீது தொடர்ந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
ஒருவர் பல விஷயங்களில் கில்லாடியாய் இருக்கலாம் என பலர் சொல்வதுண்டு. உண்மையில் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. ஒருவர் பல விஷயங்களில் திறமைசாலியாய் இருக்கலாம். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை ஆழமாகக் கற்கும்போதுதான் அவர் சாதனையாளராய் மாறுகிறார். சாதாரண வெற்றிக்கும், சாதனை வெற்றிக்கும் இடையேயான வேறுபாடு அங்கே உண்டு.
குவிலென்ஸ் ஒரு புள்ளியில் தனது சக்தி அனைத்தையும் குவிக்கும்போது எரிக்கும் தன்மையைப் பெறுகிறது. அது போலத்தான் இதுவும். நமது சக்தியெல்லாம் ஒரே லட்சியத்தில் குவிக்கப்படும் போது அதன் தாக்கம் வீரியமானதாக இருக்கும். பரந்துபட்ட சிந்தனை பல விஷயங்கள் மீது பரிச்சயத்தைத் தரும், ஆனால் ஒன்றிலும் உங்களை உச்சத்தில் வைக்காது.
நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் அசைக்க முடியாத நபராய் இருப்பதுதான் உங்களை அலுவலகத்திலும் வெற்றியாளராக்கும். ‘இந்த துறையில் இவனை விட்டால் ஆளே கிடையாது’ எனப் பெயர் வாங்கியவர்களே சடசடவென முன்னேறிக் கொண்டிருப்பார்கள் மதிக்கப்படுவார்கள். ‘அவனுக்கு எல்லாம் தெரியும், ஆனா எதிலும் ஸ்ட்ராங் கிடையாது’ எனப்படுபவர்கள் சறுக்கிக் கொண்டிருப்பார்கள்.
நமது சமகால வாழ்க்கையில் சச்சின் தெண்டுல்கர், மைக்கேல் ஜோர்டான், பில் கேட்ஸ், டைகர் உட்ஸ், ஸ்பீல்பெர்க், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என யாரை எடுத்தாலும் அவர்கள் ஒரு துறையைத்தேர்ந்து எடுத்து பிடித்துக்கொண்டு அதில் முழுக் கவனத்தையும் செலுத்தி சாதித்துக் காட்டியவர்கள் தான். பல படகுகளில் கால் வைத்து தவறி விழுந்தவர்களல்ல.
கடைசியாக ஒன்று. ஒரு துறையில் உச்சத்தில் போக வேண்டுமென்பதன் பொருள் மற்ற எல்லா துறைகளிலும் முட்டாளாய் இருக்க வேண்டுமென்பதல்ல. ஒரு துறையில் கில்லாடியாய் இருப்பவர்கள் வேறு சில துறைகளிலும் பரிச்சயமும், அறிவும், திறமையும் பெற்றிருக்க வேண்டும். அது கூடுதல் பலன் தான். ஆனால் முதல் கவனம் எங்கே இருக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியா உறுதி வேண்டும்.
அறிவின் ஆழம் புரியட்டும்
சிகரம் கண்ணில் தெரியட்டும்!
http://www.seithy.com/

Friday, November 21, 2014

மனமே ஒரு மகாசக்தி


இயற்கையின் படைப்பில் மிகவும் பிரமிக்க வைப்பது பிரபஞ்சம். பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பு. இவற்றுடன் தொடர்புடைய வன் தான் மனிதன். நீர்நிலை என்பது வாய்ப்பகுதியாகவும், நிலம் என்பது தேகமாகவும், காற்று என்பது சுவாசமாகவும், ஆகாயம் என்பது மனிதனின் நெற்றிப்பகுதியாகவும், நெருப்பு என்பது உடம்பின் உஸ்ண- மாகவும் மனித உடற் கூறுகளை இயற்கை இரசித்து அமைத்து இருக்கின்றது. இதற்கும் மேலாக உடலின் உறுப்புக்கள் யாரும் உணரமுடியாத உன்னதமாக படைப்புக்கள். இதற்கெல்லாம் மேலாக மனிதனின் உடல், மற்றும்..

உடல் உறுப்புக்கள் அனைத்திற்கும் தலைமைப் பீடமாக விளங்குவது மனம். ஒவ்வொரு உறுப்புக்களின் இயக்கங்களும். செயல்பாடுகளும் மனமே.எந்தக் காரியத்தை எடுத்தக்கொண்டாலும் நன்மையோ அல்லது தீமையோ மனச்சாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் என்று நடைமுறையாக சொல்லுகின்றோம். மனம்தான் சாட்சி.அந்த மனச்சாட்சி என்பதையே நாம் இறைவன் எனக் கூறுகின்றோம். சித்தர்களும் ஞானிகளும் சொல்லும் வார்த்தைகளோ மனதில் குடிகொண்டிருக்கும் ஆண்டவனே என்று கூறுவார்கள். மனத்தை ஆண்டு கொண்டிருக்கும் அந்த மகாசக்திக்கு அண்டவன் என்று பொருள் கொள்கின்றோம். அந்த மனதை அமைதிப்படுத்தி உடலையும் பக்குவப்படுத்தி அமைதி நிலையை அடைந்து விட்டால் பல சாதனைகளை செய்யலாம் என்று யோகிகளும் சித்தர்களும் கூறி உள்ளார்கள்.

இந்த மனக்கோவிலில் வாழும் புனிதத்தை புனிதமாக வைத்துக்கொள்ள மனிதன் மறுக்கின்றான்.

இந்த மனதை நல்வழிப்படுத்திக் கொள்ளும் வழிகள் பலவகை இருந்தாலும் சராசரி வாழ்வை மட்டுமே மனம் நாடுகின்றது. இதற்கு பிறந்த நாள்முதல் பிறவி நாள்வரை புகட்டும் ஆரம்ப நிலைப்பாடமும் வழியில் நாம் முறைகேடாக கற்றுக்கொண்ட பாடங்களிலும் மனிதனை சராசரி நிலைக்கு தள்ளுகின்றது. இதை எவ்வாறு சரிசெய்து கொள்வது ? உயர்ந்த நிலைப்பாடான நமது நல்லமனம் என்பது பிறக்கும் போது வெற்றிடமாகத்தான் படைக்கப்படுகின்றது. இந்த வெற்றிடத்தில் எதை செயல்படுத்துகின்றோமோ அதுவாகவே மனம் செயல்படுகின்றது. கோபம், காமம், அன்பு, விருப்பு, வெறுப்பு என்று எதை நெஞ்சில் விதைக்கின்றோமோ அந்த வகையைச் சார்ந்த குணங்களே உருவாக்கப்படுகின்றது. குணங்களையோ, எண்ணங்களையோ மாற்றி அமைப்பதின் மூலமாக பழுதடைந்த மனங்களைக் கூட தெய்வீக மனம்கொண்ட மாமனிதனாக மாற்றலாம். ஆகவே எண்ணங்களின் வடிவமைப்புக்களை மாற்றிக் கொள்வதன் மூலம் நம்முடைய மனங்கள் பண்படுத்தப் படுகின்றது.

இறைநிலை என்றால் என்ன.? அமைதியான மனதை, மனநிலையை இறைநிலை என்கின்றோம். மனம் அடங்கவில்லை, மன அமைதியில்லை என்றால் கோவிலுக்கு செல்கின்றோம். ஏன்? கோவிலுக்கு செல்லும்போது நம்மைப்போல் பல மனிதர்களின் மன அதிர்வுகள் மன அலைகளாக நேர்மறையான அதிர்வுகளாக மண்டபத்துக்குள் பரவியிருக்கும். அந்த அதிர்வுகளால் நம்மனம் சீர்படுகின்றது. அங்கே செல்லும்போது நம் மனத்துக்கு சக்தி கிடைக்கின்றது. இந்த பேருண்மையை உணர்ந்தவர்கள்தான் யோகிகளும், சித்தர்களும். இவர்களின் மனதின் சூட்சும சக்திகளை தெரிந்து கொண்டு மனித குலங்களுக்கு மகா காவியங்களை நூல்களாக நமக்கு படைத்துத் தந்து விட்டுச் சென்றுள்ளார்கள். ஆகவே எண்ணங்களின் வீரியத்தை நம்வாழ்க்கையின் தேவைக்கு ஏற்ப வடிவமைத்துக் கொள்ளுதல் அவசியம். எங்களின் எண்ணங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள சில வழி முறைகள் உண்டு.

பயம், கவலை எதிர்மறையான எண்ணம் தன்னைத் தானே நொந்து கொள்ளுதல் தேவை இல்லாத சிந்தனைகளை மனதில் இருந்து அகற்றி எண்ணங்களை சுத்தப்படுத்தி கொள்ளுதல் போன்ற பயிற்சிகள் மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். மனித வாழ்க்கையின் மூலாதாரமாக விளங்கும் மனத்தின் நிலைகளை பலவாறாகப் பிரித்துக் கூறலாம்.. இந்த மனம் தனது வாழ்நாள் முழுவதும் இறைநிலை என்னும் தெய்வீகத்தை மனதோடு சேர்த்து வாழ்தல் எனவும் நல்ல விசயங்களுக்காகச் சொல்லப்படும் வார்த்தைகளும். நேர்த்தியுடன் நல்லகாரியங்களை செய்து முடிக்கும் மன உறுதியும். ஏற்படும் போது மனித உள்ளத்தில் அமைதி ஏற்படும்.. சில நேரங்களில் இனிமையான, சுவையான சில விசயங்கள் கூட துன்பத்தைத் தழுவ நேரிடுகின்றது. மலையாக தெரிகின்ற பெரும் துன்பம் கூட இன்பமாக மாறிவிடுகின்றது. இவை அனைத்துக்கும் என்ணங்களே காரணம். அதற்காகத்தான் எண்ணங்களை சரிசெய்ய வேண்டுமென நம்மூத்தோர் நமக்கு சொல்லி உள்ளார்கள்.

அதுபோல் நாம் சொல்லுகின்ற சொல்லுக்கு ஒருவகை வலிமை உண்டு. அதை எந்த கோணத்தில் செயலாக்கம் செய்கின்றோமோ அவ்வாறே அந்தக் காரியம் இனிமையான காரியமாகவோ, இல்லை துன்பம் தரும் காரியமாகவோ அமைந்து விடுகிறது. இந்த மனநிலைகளை அறிந்து, புரிந்து, வாழ்ந்தால் மனித வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் உண்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை. பிறவியில் உயர்ந்த பிறவி மனிதப்பிறவி. இந்தப்பிறவி எடுத்து விட்டாலே தெய்வீகத்துக்கு சமம். என்பார்கள்.. அப்படி என்றால் வாழ்நாளில் நம்மோடு வாழ்பவர்களிடம் உண்மையோடும் நம்பிக்கையோடும் நடந்துகொள்வது அவசியம். உண்மை மட்டும் இருந்தால் போதுமா ? நன்மையும், நம்பிக்கையும் இருக்கவேண்டாமா? அவ்வாறு உண்மையுடன் சேர்ந்து பயன் தரக்கூடிய நன்மைகள் இருந்தால் உலகமே உன்னைப் போற்றும். அதுபோல மனித வாழ்க்கையில் உயர்வு தாழ்வு என்பது இயற்கைதான். அதேசமயம் உயரும்நிலை வரும்போது பணிவும் வரவேண்டும். பணிவோடு சேர்ந்த உயர்வே நிரந்தரமானது.

உண்மை என்றால் என்ன? அன்பு என்றால் என்ன? அன்போடு இருந்தால் உண்மை என்றுமே நிலைத்து நிற்கும். இந்த உண்மை என்பது அன்பைப் பொறுத்தது. அதேபோல பணிவு என்பது பண்பைப் பொறுத்தது. இந்த வகையான மனநிலைகளும் நம் வாழக்கைக்கு நன்மையான விசயங்களை உருவாக்கித் தருவதற்கான சாத்தியக்கூறுகளே.

மனித மனம் தவிர்கப்படவேண்டிய விசயங்கள் என்னவென்றால் ஆசை ,கோபம், களவு இவைகள் தான். இந்த மனோநிலையில் உள்ள மனிதர்கள் பேசத்தெரிந்த மிருக இனத்தை சேர்ந்தவர்கள் எனலாம். முயற்சியோடு சேர்ந்த நல் வழிப்பயிற்சியும் எடுத்துக் கொண்டால் தான் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். இதற்கு மாறாக அன்பு, நன்றி, கருணை அகியவற்றைக் கொண்ட மனம். மனித வடிவிலே நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லமனம் என்றே கூறலாம்.

ஆக்கம்:வேலணையூர் பொன்னண்ணா

பிரபஞ்சம்

பிரபஞ்சம் உங்களிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறது. பிரபஞ்சமானது , மக்கள் , சம்பவங்கள் , சின்னங்கள் , சகுனங்கள் , கனவுகள் , இவைகள் மூலமாக உங்களிடம் பேசிக் கொண்டேதான் இருக்கிறது . சிலர் மட்டுமே அதன் குரலை கேட்கிறார்கள். நாம் எல்லோருமே அவ்வப் போது நடக்கும் பிரச்சனைகள் அல்லது பகல் கனவு காணுதல் அல்லது நமக்கு பிரபஞ்ச செய்தி சொன்னவரிடமே வாக்கு வாதம் செய்தல் இப்படி செய்து பிரபஞ்ச செய்திகிடைப்பதை தடுத்துக்கொள்கிறோம்!

பிரபஞ்ச ஆற்றல் என்பது காஸ்மிக் கதிர்கள்தான் . இந்த காஸ்மிக் கதிர்கள் உலகில் மேலும் கீழும் பரந்து வியாபித்து சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறது. நமது எண்ண அலைகள் இந்த காஸ்மிக் அலைகளின் பிரபாவத்தில் சேர்ந்து ஆற்றல்களை அதிகப்படுத்துகிறது , நம் எண்ண அலைகள் நல்லவையாக இருப்பின் நன்மையும, தீயவையாக இருப்பின் தீமையும் நமக்கு நடக்க செய்கிறது ! நம் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி , சுக துக்கங்களுக்குநம் எண்ணங்களே காரணம் ! !

எல்லாம் வல்ல பிரபஞ்ச சக்தி எதை கேட்டாலும் தரும் . இதை எவர் ஒருவர் பூரணமாக நம்புகிறாரொ ? அவர் எதிலும் வெற்றி மேல் வெற்றி பெற்று எல்லா வளங்களும் , நலன்களும் பெறுகிறார் !!

மானுட உடலானது தெய்வீக மின் கலம் . ஞுவிட்சைத் தட்டினால் மின்சாரம் பாய்வது போலவே , உள்மனதை தட்டினால் , தெய்வீக மின்காந்த அலையானது உடலெங்கும் உள்ள நாடி நரம்புகளில் பாய்ந்து, நுண்ணுடல் , பருஉடலும் ஆரோக்கியத்தையும் , வலிமையினையும் , வல்லமைகளையும் , வீடுபேற்றையும் பெறவல்ல தாகின்னது ! !

கர்மவினைக்குக் கலங்காதே? கர்ம வினையோ.,.. தண்டனையோ .,,, அதிர்ஷ்டமோ,,,. கடவுளின் அருளோ.,,,. எதுவானாலும் மனதின் வழியாகத்த்தான் வந்தாக வேண்டும் . மனத்தின் சக்தியைப் பெருக்கி சரியான வழியில் மனத்தைப் பயன் படுத்தும் நுட்பத்தைத் தெரிந்து கொண்டால் கர்ம வினைகளைச் சர்வசாதாராணமாய் வெல்லலாம் .!

ஒரு சித்தரின் எழுத்தில் மனம் லயித்து , அவரின் எண்ண அலைகளுடன் நாம் தொடர்பு கொள்ளும் போது , சித்தரால் விட்டது , காலத்தின் பயன் கருதி நம் மூலம் வெளிப்படும் ! இது எநதத் துறைக்கும் பொருந்தும் . ஒத்த மனமுள்ள முன்னோடிகளின் எண்ணங்களி லிருந்து நாம் எண்ணியதைத் தேடினால் அது கன்டிப்பாக கிடைக்கும் !

சித்தர்களை வரவைக்கும் மந்திரம் : ஓம் சிங்ரங் அங்சிங் மசிவசி . என்று தியானத்தால் தியானிப்பவரின் பிரான ரிதத்தில் அது உடுருவும் போது கோடிட்ட இடத்தில் அவரவர் விரும்பும் முன்னோடி தமிழ் சித்தர்களை பூர்த்தி செய்து ஏற்க்கும் போது தியானிப்பவரின் பிராணசலனம் அந்த சித்தரை வரவைக்கும் ! ! சித்தர்களால் நிரூபணமானதுதான் !

டெலிபதி : டெலிபதி எப்படி வேலை செய்கிறது? நம் எண்ண அலைகள் நம்மைச் சுற்றிலும் உள்ள ஆகாயத்தில் பரவுகிறது. நமது மனோ சக்திகளைப் பயன் படுத்தி , நம் மனத்திரையில் ஒருவரைப் பார்த்து பேசும் போது , ஆகயத்தில் பரவும் நமது எண்ண அலைகள் அவர்கள் மனதில் உடனே பரவி பதிந்து விடுகிறது. நம் ஒருவருக்கு டெலிபதி மூலம் ஒரு செய்தி அனுப்பும் போது , அவர் ஐம் புலன்களும் அடங்கி (தூக்கத்தில்) ஆழ் நிலையில் இருக்கும் போது , நம் அனுப்பும் செய்தி உடனே அவர் (ஆழ் ) மனதில் பதிந்து விடும் ! இந்த முறையில் நாம் அனேக காரியங்களில் வெற்றி அடையலாம் ! !

பிராண ஓட்டம் , இரத்த ஓட்டம், விந்தோட்டம் , மன ஓட்டம், இவைகளே சமச் சீர்ப்படுத்துவதே குண்டலினி பயிற்சியாகும் . இதில் தேர்ந்து , சகஸ்ராரத்தில் ஊடுருவும் போது , மாவடு போல் உள்ள ஞானக்கண் எனப்படும் பீனியல் தெரபியிலிருந்து வடியும் சக்திப் பாலைப் பருகி தெய்வீகத்தை உணரும் சித்தனுக்கு , உடலை வலுப் படுத்தும் தேங்காய்ப் பால் தேவையில்லை என்பதை குதம்ம்பை சித்தர் : மாங்காய் பாலுண்டு ' , மலைமேலிருப்பார்க்குத் , தேங்காய்ப்பால் ஏதுக்கடி _ குதம்பாய் தேங்காய்ப்பால் ஏதுக்கடி" என்கின்றார்

பிரச்சனைகளுக்கு கனவின் மூலம் விடை ? 1 படுக்கையில் படுத்துக் கொண்டு பார்வையை மேலே உயர்த்தி கண்களை மூடி ஆல்பா லெவல் தியானத்தில் இருக்கவும் . 2 மனதுக்குள் நான் எனது பிரச்சனைகளுக்கு விடை காண கனவில் ஒரு தீர்வைச் சொல்லவும் , நான் கனவை ஞாபகம் வைத்துக் கொள்வேன். என பலமுறை மனதுல் சொல்லிக் கொண்டே உறங்கி விடவும் . 3 காலையில் கண் விழித்ததும் நீங்கள் கண்ட கனவுகள் ஞாபகத்திற்க்கு வரும் அதன் மூலம் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்! பல நாள் முயற்ச்சி செய்ய நல்ல தேர்ச்சி அடைவீர்கள் !

மனித மூளையில் நான்கு விதமான அலைகள் உள்ளன . ஆலஃபா , பீட்டா , தீட்டா , டெல்டா . இந்த அலைகளை C,.P.S. என்ற அலரு முறையினால் அளவிடுகிறாகள். CYCLES PEF SECOND என்பதாகும் . இதை E.E.G. என்ற கருவி மூலம் அளக்க முடியும் என்பது மருத்துவ உண்மை . 1 ஆல்பா நிலை(8முதல் 12 G.P.S.வேகம்) என்பது சாதாரண மனிதர்கள் சற்று தன்னை மறந்த நிலை . 2 பீட்டா நிலை(12 முதல் 15G.P.S. வேகம்) நம்முடைய சாதாரண விழிப்பு நிலையே . 3 தீட்டா நிலை (4முதல்8 G.P.S வேகம்) இது மிக அதீத ஆழநிலைத் தியானம் சமாதி , வலிப்பு நோயினால் மயங்கும் நிலை. 4டெல்டாநிலை(4 G.P.S குறைவான வேகம்) மிக ஆழ்ந்த உறக்கம் , கோமா நிலை . இதில் சாமான்யருக்கும் அனுபவத்தால் உணரக்கூடிய நிலை ஆல்ஃபா!

மன காட்சி மூலம் உங்கள் எண்ணங்களை நிறைவேற்றலாம் . ? நீங்கள் உங்கள் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று ஆசைப் படுகிறிர்களொ , அந்த மாதிரி வாழ்க்கையை உங்கள் மனதில் சினிமா பார்பது போல் அடிக்கடி பார்த்து வர வேண்டும். எதிர் காலத்தில் இது நடக்கும் என்ற உறுதியான எண்ணமும் வேண்டும் . இல்லா விட்டால் அது ஒரு பொழுது போக்குகான எண்ணமாகி தோல்வி அடைந்து விடும். . !

ஓம் சிவாய நம :

Wednesday, November 19, 2014

திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம்


திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் (சனிப் பெயர்ச்சியும் (2/11/2014) சில நுட்பமான விளக்கங்களும்):

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை சனிப் பெயர்ச்சி நடந்தேறும். சனி கிரகத்தின் அதிதேவதை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதை பெயர்ச்சி என்று சோதிட சாத்திரங்கள் குறிக்கிறது. ராசிகள் மொத்தம் 12.

தற்பொழுது சனி கிரகம் விருச்சிக ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொருவரின் ராசிக்கும் விருச்சிக ராசிக்கும் இடையே அமைந்துள்ள இடைவெளியைக் கணக்கில் கொண்டு தான் பொதுப் பலன்கள் அமையும். (உ.) முதல் ராசியான மேஷ ராசியில் இருந்து விருச்சிகம் 8ஆம் இடத்தில் அமைந்துள்ளது. இதையே ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி என்பர்.

கோடிப் பிறவிகளில் ஒரு ஆன்மா சேர்த்து வந்துள்ள நல்வினை; தீவினைக் குவியல் 'சஞ்சித வினை' என்று அழைக்கப் பெறும். அக்குவியலில் இருந்து ஒரு சிறு பகுதியை அனுபவித்து முடிக்க ஒரு ஆன்மா பிறவி எடுக்கிறது. இது 'பிராரப்த வினை'.

கிரகங்கள் துன்பங்களையோ இன்பங்களையோ புதிதாக உற்பத்தி செய்து வழங்குவதில்லை. துன்பமோ இன்பமோ பிராரப்த வினையின் பலனாகவே ஒவ்வொரு ஆன்மாவையும் வந்து எய்தும்.

ஒரு கிரகம் சாதகமான இடத்தில் பெயர்ச்சியுற்றால் பிராரப்த வினையில் உள்ள நல்வினைப் பலன்கள் மிகுதியாகவும், பாதகமான இடத்தில் பெயர்ந்தால் அதே பிராரப்தத்தின் தீவினைப் பலன்கள் மிகுதியாகவும் அந்தந்த ராசியினரை வந்துச் சேரும்.

கிரகங்கள் ஒவ்வொருவரின் வினைகளையும் உரிய நேரத்தில் சேர்ப்பிக்கும் அஞ்சல் நிலைய அதிகாரிகள் (Post Masters). நம் தீவினைகளே நமக்கு துன்பத்தை ஊட்டுகின்றன; கிரகங்கள் அல்ல என்ற புரிதல் மிக மிக அவசியம்.

ஞானசம்பந்தர் பரம கருணையோடு அருளியுள்ள சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை அனுதினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம வினையின் வேகத்தை சர்வ நிச்சயமாய் குறைத்துக் கொள்ள முடியும்.

கோளறு பதிகத்தின் 11 பாடல்களின் பதங்களையும் முறையாகப் பிரித்து, பொருளையும் எளிமைப் படுத்தி கீழ்க்கண்ட வலைத் தள முகவரியில் பதிவேற்றம் புரிந்துள்ளேன்.

http://hindusanatanadharmam-saivam.blogspot.com/…/blog-post…

கிரக வழிபாட்டை தவிர்த்து இஷ்ட தெய்வத்தின் கருணையை மட்டுமே வேண்டுவோம். கிரகங்களுக்கு திருவிளக்கு ஏற்றுவதை விடுத்து தெய்வத்தின் பொருட்டு திருவிளக்கு ஏற்றுவோம். விதவிதமான கற்களை அணிவதால் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை.

நற்கருமங்களை மிகுதியாகப் புரிவதும் இறை வழிபாடும் மட்டுமே சிறந்த பரிகாரம். (ஓம் நமசிவாய).

கோளறு பதிகம் (திருஞானசம்பந்தர் அருளியது):

முதல் பாடல்:

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பொருள்:
இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது.

இரண்டாவது பாடல்:

என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பொருள்:
அனைத்து நட்சத்திரங்களும், நாள்களும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் புரியாது. மாறாக நன்மையே விளைவிக்கும்.

மூன்றாம் பாடல்:

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பொருள்:
திருமகள், துர்க்கை, அஷ்ட திக்குப் பாலகர்கள், பூமியை இயக்கும் அதி தேவதை ஆகியோர் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். குற்றமற்ற செல்வமும் வந்து எய்தும்.

நான்காம் பாடல்:

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
சினம் மிகுந்த கூற்றுவன், அக்கினி, காலனின் தூதுவர்கள் ஆகியோர் இடர் புரியாமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். கொடிய நோய்கள் வருத்தாது.

ஐந்தாம் பாடல்:

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
கொடிய சினத்தை உடைய அரக்கர்களாலும், பஞ்ச பூதங்களாலும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும். இல்லாமையாகிய வறுமை வந்து எய்தாது.

ஆறாம் பாடல்:

வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடு உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
சிங்கம், புலி, கொல்லும் தன்மை கொண்ட யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியவைகளால் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும்.

ஏழாம் பாடல்:

செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
வெப்பம், குளிர், வாதம்; பித்தம் முதலான நாடிகள் ஆகிவைகளும் தம் இயல்பில் இருந்து நீங்காமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே விளைவிக்கும்.

எட்டாம் பாடல்:

வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
கயிலை மலையை பெயர்க்க முற்பட்ட இராவணனை பெரும் இடர் எய்தியது. அது போன்று இடர்கள் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நேராது. ஆழ்கடலும் நன்மையே செய்யும்.

ஒன்பதாம் பாடல்:

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
நான்முகன், ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, மறைகள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். மேலும் வரும் காலங்கள் ஆன பலவும், கடலும், மேரு மலையும் நன்மையே விளைவிக்கும்.

பத்தாம் பாடல்:

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
புத்தரையும் சமணரையும் வாதில் வெல்லும் நிலையான பெற்றியை உடையது சிவபெருமானின் திருநீறு. இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் நேராத வண்ணம் காத்து நிற்கும் பெருமானின் திருநீறு.

பதினோறாம் பாடல்:

தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே!!

பொருள்:
இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும். இது நம் ஆணை.

Tuesday, November 11, 2014

வெற்றியின் ரகசியம் விஜயாபதி

வெற்றியின் ரகசியம் விஜயாபதி

எத்தனையோ மகான்களின் சமாதி மற்றும் ஒடுக்கங்களை வழிபட்டு வரக்கூடிய எனக்கு மிகவும் பிடித்தமான இடம் விஜயாபதி. விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். இந்த இடத்தின் ரகசியத்தை முழுமையாக அறியாத வரையில் என் வாழ்க்கையில் வெற்றி என்பது எட்டிப்பிடிக்க முடியாத தூரம் ஆகும். ஆனால், இன்று என் வாழ்க்கையில் வெற்றி என்பது தொடக்கூடிய தூரம் ஆகும்.

அப்படி என்னதான் இந்த இடத்தில் ரகசியம் உள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் குலகுரு வெள்ளைச்சாமி அடிகள் அருளாலும், நான் விடும் மூச்சுக் காற்றின் வழியாக என்னை வழிநடத்தும் குருவருளாலும் இந்த இடத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள முடிந்தது.

வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். யார் இந்த விஸ்வாமித்திர மகாரிஷி என்றால் தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார். தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர். அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர், கோபப்படுபவர். இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் வெற்றியின் ரகசியம் ஆரம்பமாகிறது.

இறைவனுக்குப் போட்டியாக சொர்க்கத்தைப் படைத்த காரணத்தால் தன்னுடைய தவசக்தியை முழுமையாக இழந்த விஸ்வாமித்திர மகரிஷி அந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் உள்ள இடிந்தகரை ஊருக்கு அடுத்து உள்ளது. இங்கே வந்து தவம் செய்யும்பொழுது தவத்தைத் கெடுக்கும் வகையில் இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய தசரதசக்கரவர்த்தியின் புதல்வர்களாகிய இராமன், லட்சுமணனை அழைத்துக் கொண்டு விஜயாபதி என்ற இந்த இடத்திற்கு வந்தார். இந்த இடம் அந்தக் காலத்தில் தில்லை மரங்கள் நிறைந்த வனப்பகுதியாகும்.

அருகில் கடற்கரை அமையப் பெற்ற இடம் ஆகும். தன்னுடைய தவத்தைத் தொடங்க தன்னுடைய இஷ்ட்ட தெய்வமான பராசக்தியான தில்லை மகா காளியை சிதம்பரத்தில் இருந்து அழைத்து வந்து கடற்கரை ஓரத்தில் பிரதிஷ்டை செய்தார். மேலும் தவத்தின் போது இரவு, பகல் பாராமல் பசி, தூக்கம் தெரியாமல் இருக்க வேண்டி ராமர், லட்சுமணருக்கு பலா அதிபலா என்ற மந்திரத்தை குரு உபதேசம் செய்தார். இங்கு ஒரு ரகசியம் மறைவாக உள்ளது. ஏனெனில் தசரதனின் குரு வசிஷ்ட்ட மகரிஷி ஆவார். இந்த வசிஷ்ட்ட மகரிஷியினால் வளர்க்கப்பட்டவர்கள் இராமர் லட்சுமணர் ஆவார்கள். ஆனால் இராமன் லட்சுமணர்களுக்கு குருவாக இருந்து குருமந்திர உபதேசம் செய்தவர் விஷ்வாமித்திர மகரிஷி ஆவார். ஆகவே இராமர், லட்சுமணரின் குருநாதர் பிரம்மரிஷி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட விஷ்வாமித்திர மகரிஷி ஆவார்.

இதனை படிக்கும் அன்பர்கள் மறக்காமல் இதனை புரிந்து கொள்ள வேண்டும் தாடகை என்ற அரக்கியை இராமர், லட்சுமணர்கள் வதம் செய்தனர். விஷ்வாமித்திர மகரிஷி இழந்த சக்தியை மீண்டும் திரும்பப் பெற்றார். இராமர், லட்சுமணருக்கு பெண்ணை வதம் செய்ததால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. இதனை நீக்குவதற்கு சிவனையும், தாய் அகிலாண்ட ஈஸ்வரியை பிரதிஷ்டை செய்து அந்த இடத்தில் உள்ள கடற்கரையில் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கினார். தனக்கு உதவிய ராமனுக்குப் பரிசளிக்க விரும்பி ராமனை அழைத்துக் கொண்டு மிதிலைக்குச் சென்றார். ஏனெனில் மிதிலையில் ஜனக மன்னனின் மகள் சீதா திருமணம் நடைபெற சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ராமனுக்கு சீதையை மணம் முடிக்க வேண்டும் என்பது விஷ்வாமித்திரரின் ஆசை ஆகும். காலத்தின் கட்டாயமும் அதுவாகும். ஆனால், தசரதனின் குருநாதர் வசிஷ்ட்டர் விஷ்வாமித்திர மகரிஷியின் எதிரி போன்றவர். விஸ்வா மித்திரர் பிரம்ம ரிஷி பட்டம் பெறுவதை விரும்பாதவர் ஆவார். இந்த வசிஷ்ட்ட மகரிஷி சீதை இருவரால் கவர்ந்து செல்லப்பட வேண்டும் என்று விதி உள்ளது. எனவே ராமனுக்கு சீதையை கல்யாணம் செய்யக்கூடாது என்று கூறி தடை செய்தவர். ஆனால் இந்த தடையை மீறி விஷ்வாமித்திரரின் அருளால் இராமன் வில்லை வளைத்து சீதையை மணம் முடிக்கச் சென்றார்.

திருமணத்தைத் தலைமையேற்று நடத்தித் தர விஷ்வாமித்திரரும் சென்றார். ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில் விஷ்வாமித்திரரை அவமானப்படுத்தக் காத்திருந்த வசிஷ்ட்டர் தசரதனின் துணையுடன் ராமன் திருமணத்தை நடத்தினார். ராமன் தன்னுடைய குரு விஷ்வாமித்திரர் தான் திருமணத்தை நடத்தித்தர வேண்டும் என்று சபையில் எடுத்துக்கூறாமல் மவுனம் காத்தார். இதனால் குருவின் மன வருத்தத்திற்கு ஆளானார். திருமணத்தை நடத்தக்கூடாது என்ற வசிஷ்ட்டர் தன் சுயநலத்திற்காக திருமண சடங்கை நடத்தினார். இதனால் ராமன், சீதா திருமண வாழ்க்கையில் துன்பமும், போராட்டமும் நிறைந்ததாக அமைந்தது. இதிலிருந்து நாம் புரிய வேண்டியது என்னவென்றால் தாய், தந்தையை விட குருவே மேலானவர் ஆவார் என்பதை உணர வேண்டும். எனவே நாம் அனைவரும

ஓம் விஸ்வாமித்ராய வித்மஹே

பிரம்ம ரிஷியாய தீம மஹி

தன்னோ சத்திய மித்திர ப்ரசோதயாத்

என்று அனுதினமும் ஜெபித்து குருவருளைப் பெறுவோம்.

முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் என்ற புராண சிறப்பினை அறிவோம். தில்லை மரங்கள் அடர்ந்த காடு போன்ற இந்த கடற்கரை பகுதியில் தற்சமயம் இரண்டு தில்லை மரங்கள் மட்டுமே சாட்சியாக இருக்கின்றன. கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் அன்னை தில்லை மகா காளி குடியிருந்து அருள் ஆட்சி செய்து வருகிறார்.

இங்கு இவர்களுக்கு கொய்யா பழம், சாக்லேட், மிட்டாய், எள்மிட்டாய் நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது. இதன் மூலம் நம் குடும்பத்தில் இறந்த சிறு கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வழி கிடைக்கிறது. மேலும் இங்குள்ள கடற்கரை மண்ணில் புரண்டு, உருண்டு எழுந்து மீண்டும் கடல் நீராடி பின்பு தில்லை காளியை வணங்குவதன் மூலம் நம்முடைய பாவகர்மாக்களை அன்னை காளி நீக்கி அருள்புரிகிறார். மேலும் விஷ்வாமித்திரரால் பூஜிக்கப்பட்ட ஓம குண்ட விநாயகர் கோவில், சிவன் சந்நிதி, தாய் அகிலாண்டேஸ்வரி, கன்னி மூல கணபதி, வள்ளி தெய்வானை சமேத முருகன், கால பைரவர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் அமையப்பெற்றுள்ளன. இவற்றில் சிகரம் வைத்தாற்போல கோவிலின் பின்புறம் இராஜராஜேஸ்வரி பீடம் மற்றும் சித்தர் சன்னதி அமைய பெற்றுள்ளது. இங்கு ஒவ்வொரு பௌர்ணமி இரவும் பக்தகோடிகளால் சிறப்பாக அன்னதானத்துடன் பௌர்ணமி பூஜை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இங்கு விஷ்வாமித்திர மகரிஷியின் சூட்சம சமாதி நிலையும் அமையப் பெற்றுள்ளது. இந்த தகவல் வல்லநாட்டு சித்தர் சாது சிதம்பர சுவாமிகளால் கண்டு உணர்ந்து சொல்லப்பட்டது. இந்த ஆலயம் சுமார் 60வருடங்களுக்கு முன்பு சிதிலம் அடைந்து இருந்த காலத்தில் வல்லநாட்டு சுவாமி சாது சிதம்பரம் அவர்களால் இரண்டு முறை 1008 நவக்கிரக தீப ஜோதி ஏற்றி வழிபட்டு பூஜை செய்யப்பட்ட பின்பு தான் இன்று தமிழகம் முழுவதும் பக்தர்களால் வழிபட கூடிய சிறந்த பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.

இக்கோயில் சிறப்புகள்:

இக்கோவிலில் செய்யப்படும் நவ அபிஷேகபரிகார பூஜையின் பயனாக நம்முடைய முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவகர்மாக்கள் மற்றும் நவகிரக தோஷங்கள் நீக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்

1. தீராத கர்ம வியாதிகள், ஆயள் கண்டம்.

2. எதிர்ப்புகள்,கோர்ட், கேஸ் விவகாரங்கள்.

3. குழந்தை பாக்கிய தடை பிரச்சனைகள்.

4. தொழில் முடக்கம், புத்தி மாறாட்டம் போன்ற பிரச்சனைகள் நிவர்த்தி ஆவதை நான் 100 சதவீதம் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறேன். மேலும் ஒவ்வொரு ஜோதிடரும் கட்டாயம் 3 வருடங்களுக்கு ஒரு முறை இங்குள்ள கடலில் குளித்து விநாயகர், காளி, சிவனை வணங்கி பின்புறம் உள்ள விஷ்வாமித்திரர் சித்தர் பீடத்தில் ராஜராஜேஸ்வரி பீடத்தில் அவரவர் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதிக்கு உரிய எண்ணிக்கையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர கட்டாயம் ஜோதிடத்தில் வாக்குபலிதம் அதிகரிக்கும் என்பது நான் கண்டு உணர்ந்த அனுபவ உண்மை ஆகும்.

மூன்று பௌர்ணமிக்கு மற்றும் அமாவாசைக்கு தொடர்ந்து சென்று தீபம் ஏற்றினால் எப்படிப்பட்ட பிரச்சனைனகளையும் தவிடுபொடியாக்கி விஸ்வாமித்திர மகரிஷி காத்து அருள்வார். இங்குள்ள கடலில் குளித்துவிட்டு குளித்த ஆடைகளை கடலில் விட்டுவிட வேண்டும். மேலும் இங்குள்ள கோவிலில் இருந்து எந்த ஒரு பிரசாதங்களையும் வீட்டிற்கு கொண்டு செல்ல கூடாது. நான் பெற்ற இன்பத்தை வாசகர்களுக்கு படம் பிடித்து காட்டி விட்டேன்.

வேணும் சுபம் வல்லநாட்டு சுவாமி அருள் துணை! ஸ்ரீகண்ணையா யோகி அருள் துணை! ஸ்ரீவெள்ளைச்சாமி அடிகள் அருள் துணை!

Sunday, November 9, 2014

வாஸ்து பார்ப்பது உண்மையா?


வாஸ்து பார்ப்பது உண்மையா?
அதன் நோக்கம் என்ன?
வாஸ்து என்பது நம் முன்னோர்கள் தங்கள் அறிவியல் நுண்ணறிவால் கண்டுபிடித்த ஒரு கட்டுமான சாஸ்திரம்.
ஆனான் தற்போது வஸ்து பணம் பொருட்டு பலவிதமாக திரித்தும்,பொய்யாகவும் பிரச்சாரம் செயப்படுகிறது.
எப்போது வாஸ்து பார்ப்பார்கள்?
----------------------------------------------------
பொதுவாக பண்டைய காலங்களில் புதிதாக ஒரு ஊர் நிர்மாணித்தால் அதற்க்கு வாஸ்து பார்பார்கள்.
உதாரணமாக வடகிழக்கு சனி மூளை எனப்படும் இடத்தில் திசையில் பொதுவாக நீரோட்டம் அதிகம் இருக்கும் ஆதலால் அங்கு குளம்,ஏறி போன்ற நீர்நிலைகளை அமைப்பர்.சனிமூலை தாழ்வான பகுதி.ஆதால் அங்கு நீர் தேங்கும்.அதற்க்கு நேர் எதிரான திசை தென்மேர்க்காகும்.அது மேடான பகுதி.ஆதலால் மழை காலங்களில் அங்கு நீர் தேங்க வாய்ப்புகள் குறைவாதலால் அத்திசையில்தான் உழவு செய்வர்.
ஆக வாஸ்து என்பது மிக முக்கியமாக ஊர் நிர்மாணத்திற்காக இயற்றப்பட்ட அறிவியல் கட்டுமான நூல்.
வீடு கட்டும்போது வஸ்து பார்ப்பது எதற்கு?
-------------------------------------------------------------------------
முன்கூரினார்போல தாழ்வான பகுதுயாதளால் வடகிழக்கில் நீர்நிலைகள் இருக்குவேண்டும்.
தென்மேற்கு திசை வாயு திசை எனப்படும்.நம் நாட்டு பூகோள அமைப்பாவது தென்மேற்கில் இருந்து காற்று வீசும் நமக்கு பருவமழையும் தென்மேற்கு பருவமழை தான்.ஆகையால் காற்று பலமாயுள்ள இடத்தில் சமையல் அரை இருக்ககூடாது.
அதற்க்கு நேரெதிர் திசை தென்கிழக்கு திசை அக்னிமூலை எனப்படும்.காற்று குறைவாக இருக்கும் அவ்விடம் நெருப்பு எரியூட்ட ஏற்ற இடம்.
அது போன்று தான் வீடுகளுக்கு வஸ்து பார்க்கும் முறை துவங்கியது.
எங்கு வாஸ்து பார்க்க அவசியம் இல்லை?
-----------------------------------------------------------------------
1000 வாசல்கள் உள்ள ஊரில் வாஸ்து பார்க்க வேண்டாம் என்றும்,சூரிய கிரணங்கள் நேரடியாக வீட்டில் விழும் பட்சத்தில் அந்த வீட்டில் வாஸ்து தோஷம் அண்டாது என்றும் தான் வாஸ்து சாத்திரம் சொல்கிறது.அதை யாரும் சொல்லக்காணோம்.
தயவு செய்து யாரும் வஸ்துக்கள், வச்துமீன் , வச்துபரவை , வச்துபோம்மை,வஸ்துசெடி போன்றவற்றை வங்கி ஏமாறவேண்டாம்.
நம் வாழ்கையை இறைவன் நன்றாகத்தான் தீர்மானம் செய்து வைத்துள்ளான்.அவன் இயக்கத்தின் படி நடந்து வாழ்வை சிறப்பாக வாழ்வோம்.
நிம்மதி வாஸ்துவிலோ,ராசிகளிலோ,ராசிக்கல் மோதிரத்திலோ இல்லை.நிம்மதி நம்மிடம் தான் உள்ளது.

Friday, November 7, 2014

வெற்றிக்கான வீரிய விதைகள்




ஏன் என்னால் வெற்றி பெற இயலவில்லை …? – வெற்றிக்கான வீரிய விதைகள்

நாம் அனைவருமே எடுத்துக்கொண்ட காரியத் தில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகி றோம். ஆனால், அனைவராலும் வெற்றி பெற முடிவதில்லை. இந்த காரியத்தில் ஏன் என்னா ல் வெற்றி பெற இயலவில்லை என்று பலரும் யோசிப்பதில்லை; மாறாக, அவ்வளவுதான் என் விதி என்று விட்டுவிடுகிறோம் . ஆசை மட்டும் இருந்தால்

வெற்றி கிட்டாது. ஆசையுடன் சிலசெயல்களையும் மேற்கொண்டா ல் மட்டுமே வெற்றிகிட்டும். அதற்குசெய்ய வேண்டியன என்ன ?

இதோ சில டிப்ஸ் உங்களுக்காக …

*நாம் எடுத்துக்கொண்டகாரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடா முயற்சியும் , நம்பிக் கையும்தேவை. அந்த நம்பிக்கை, “என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும் ” என்ற மன உறுதியுடன் அமைய வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் திறமை உள்ளவராக இருந்தா லும் கூட உங்களால் வெற்றி பெற இயலும் .

* பிரச்னைகள் வரும்போது, நான் இவ்வளவுதான், இது என்விதி என்றுமனம் தளரக்கூடாது. மாறாக, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்கவேண்டும். அப்ப டி நம்பினால், நீங்கள் புதியவனாக, புதியவளாக மாற முடியும். அந்த தன்னம்பிக்கைதோல்வியுறுபவர்களை, வெற்றியாளராக்கும்; சோம்பேறிகளை சுறுசுறுப்பான வர்களாக மாற்றும் .

*உங்கள் இலக்கை தெளிவாக வைத்துக்கொள்ளுங்க ள். அந்த இலக்கை பாசிடிவ் எண்ணங்களும், நம்பிக் கைகளும் சூழ்ந்திருக்க வேண்டும். பின், ஆக்கப்பூர்வமாக அதை தொடர்ந்து செய்யும்போது உங்களால் வெற்றி அடைய முடியும் .

* தன்னம்பிக்கையும் தைரியமும் நீங்கள் நினைக்கும் எண்ணங்களோடு இணைந் திருக்கும் போது உங்களுக்கு வெற்றி நிச்ச யம். மாறாக, எதிர்மறையான (நெகடிவ்) எண்ணங்களை வளர்த்துக்கொண்டால், விளைவும் மோசமானதாகத்தான் இருக்கும் . ஏனென்றால் , உங்கள் ஆழ்மனம், உங்கள் எண்ணங்கள் அனை த்தையும் ஏற்றுக் கொள்கிறது. ஆழ்மன திற்கு நீங்கள் எதை அனுப்புகிறீர்களோ, அதையே உங்களுக்கு திருப்பி அனுப்புகி றது. உதாரணமாக, தாழ்வுணர்ச்சி, பயம் போன்றவற்றை நீங்கள் வளர்த்துக் கொ ள்ளும்போது, அது உங்கள் ஆழ்மனதினு ள்சென்று அதையே திரும்ப அனுப்புகிறது. ஆக நீங்கள் உங்கள் மனதினுள் அனுப்புவதையே பெறுகிறீர்கள்.

எனவே, மனதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதில், ஆரோக்கியமான, ஆ க்கப்பூர்வமான, தைரியமான எண்ணங்களால் நிரப்புங்கள். வெற்றி நிச்சயம் !

கௌதம் @ http://vidhai2virutcham.com/

Monday, November 3, 2014

ஆன்மீகப் பயணம் தரும் அற்புதமான அனுபவங்கள்!!!


வாழ்க்கையில் முன்னேற ஆன்மீகப் பயணம் தரும் அற்புதமான அனுபவங்கள்!!!
=======================================================
மாற்றம் ஒன்றே மாறாதது' என்று சொல்வார்கள். ஆம். அன்றாட வாழ்க்கையிலிருந்து சிறிது விடுபட்டு இருந்தால் தான் எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் நாம் நம் வாழ்க்கையைச் சிறப்பாகக் கொண்டு செல்ல முடியும். காலையில் எழுவது, அவதி அவதியாக வேலைக்குக் கிளம்புவது, பார்த்த முகங்களையே பார்ப்பது, செய்த வேலைகளையே செய்வது, பின் பரபரவென்று வீட்டுக்குக் கிளம்புவது, மணிக்கணக்கில் டிராஃபிக்கில் காத்திருப்பது, வீட்டுக்கு வந்தாலும் மனைவி-குழந்தைகளுடன் மீண்டும் வெளியே செல்வது... இப்படி ஆண்டு முழுவதும் நம் வாழ்க்கை ஒரு எந்திர கதியாகவே ஆகிவிட்டது. இதனால் பயங்கரமாக போர் அடிப்பது மட்டுமல்ல, மனமும் உடலும் சோர்ந்து போய் விடுவதும் உண்டு. இந்தச் சோர்விலிருந்து விடுபட ஆண்டுக்குக் குறைந்தது ஒரு முறையாவது ஹாயாக ஒரு டூர் அடிப்பது நல்லது. அன்றாட வேலைகளை மறந்து தெரியாத முகங்களையும் இடங்களையும் ஓரிரு நாட்கள் பார்த்து விட்டு வந்தால் தெம்பாக இருக்கும். அடுத்த டூர் வரை கொஞ்சம் சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கலாம். அதிலும், இந்த டூர் ஒரு ஆன்மீகப் பயணமாக அமைந்து விட்டால் மனம் அமைதியாக இருக்கும். உள்ளத்தில் ஒருவித ஒளி பிறக்கும். இன்ன மதம் தான் என்றில்லை. அனைத்து மதங்களிலும் ஆன்மீகப் பயணத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய ஆன்மீகப் பயணங்கள் நம் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதற்கான 10 காரணங்களைப் பார்க்கலாம்.
1.வாழ்க்கை அழகை உணர்தல்.
-------------------------------------------------
அரைத்த மாவை அரைப்பது போல் ஒரே வேலைகளையே திரும்பத் திரும்பச் செய்வதால், நம் வாழ்க்கையின் உண்மையான அழகைப் பார்க்காமல் விட்டு விடுவோம். அல்லது, அந்த அழகையே மறந்து விடுவோம். அன்றாட வேலைகளிலிருந்து விடுபட்டு வெளியே வந்தால் தான் நாம் அந்த அழகைக் கண்டு, ரசித்து, தக்கவைத்துக் கொள்ளவும் முடியும்.
2.வாழ்க்கையைப் புதுப்பித்தல்.
------------------------------------------------
2005 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சில உணவு வகைகளை நாம் இப்போது சாப்பிட முடியுமா? அவற்றைத் தூக்கி எறிந்து விட்டு புதிதாகத் தயார் செய்யப்பட்ட உணவுகளைத் தானே சாப்பிடுகிறோம்? வாழ்க்கையும் அப்படித் தான். அதைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு ஒருவிதமான சாகசப் பயணம் நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.
3.புதிய உறவுகள், நட்புகளை வளர்த்தல்.
---------------------------------------------------------------
நாம் மேற்கொள்ளும் பயணங்களின் போது, பல புதிய உறவுகளும் நட்புகளும் கிடைக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. டூர் முடிந்து அவர்களிடம் பிரியா விடைபெற்று வந்தாலும், சில நாட்களுக்குப் பின் அவர்களுடன் போனில் பேசும் போது நமக்குக் கிடைக்கும் உற்சாகமே தனி! அடுத்த டூரின் வருகையை இரு தரப்பினருமே சுறுசுறுப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.
4.நம்மையே புதுப்பித்தல்.
----------------------------------------
வீட்டில் சில சமயம் தனியாக இருந்தாலும், அதை ஒரு தனிமை என்றுகூட சொல்ல முடியாது. நமக்கென ஒரு தனிமை எது என்பது நம் உள்ளத்திற்குத் தான் தெரியும். இத்தகைய ஆன்மீகப் பயணத்தின் போது மட்டுமே நமக்கு அந்தத் தனிமை கிடைக்கும். அதை நாம் தவறவே விடக் கூடாது.
5.புதிதாகக் கற்றுக் கொள்ளல்.
----------------------------------------------
குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஓட்டுவது போலத்தான் நாம் நம் அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். வாழ்க்கையின் உண்மையான அழகோ, நம் உண்மையான திறனோ நமக்குப் பிடிபடாது. ஆனால், ஒரு ஆன்மீகப் பயணத்தின் போது, நாம் புதிது புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள முடியும். பல்வேறு மனிதர்கள் மற்றும் பொருள்களின் மூலம் அதற்கான வாய்ப்புகள் நமக்கு நிறைய கிடைக்கும்.
6.பொறுப்புணர்ச்சி, முக்கியத்துவம் வளர்தல்.
----------------------------------------------------------------------
வயதாக வயதாக வாழ்க்கையில் நமக்குப் பொறுப்புணர்ச்சி அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதே நேரம், எதற்கு முக்கியத்துவம், முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் திணறுவோம். அன்றாட வேலைகளிலிருந்து நாம் விலகி இருக்கும் போது இந்தத் தகுதிகளை வளர்த்துக் கொள்ள அதிக வாய்ப்புக்கள் கிடைக்கும்.
7.பிரச்சனைகளை சமாளித்தல்.
-------------------------------------------------
நம் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் மிகவும் திண்டாடிக் கொண்டிருப்போம். மனத்தில் ஒரு நிம்மதியே இருக்காது. வீட்டை விட்டு வெளியேறி, ஒரு தியான நிலையில் இருக்கும்போது அந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் எளிதாகக் கிடைக்கும்.
8.மன நிம்மதி கிடைத்தல்.
----------------------------------------
வாழ்க்கையின் சில கட்டங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியாமலும் குழம்பிப் போய்க் கிடப்போம். இத்தகைய குழப்பங்களைத் தகர்த்து எறிய ஆன்மீகப் பயணங்கள் நிறைய உதவும்.
9.நல்ல சிந்தனைகளை வளர்த்தல்.
------------------------------------------------------
ஆன்மீகப் பயணங்களின் போது நாம் பார்க்கும் மரங்கள், அருவிகள், ஆறுகள், கோவில்கள், அந்நிய பாஷைகள், மக்கள் ஆகியவை நம்மிடம் உள்ள பாஸிட்டிவ் விஷயங்களை வெளிக் கொண்டு வர மிகவும் உறுதுணையாக இருக்கும்
10.உடல் நலம் ஆரோக்கியமாதல்.
-----------------------------------------------------
வீட்டை விட்டு வெளியில் சென்று சாப்பிடுகையில், அந்த உணவுகளின் தரத்தைப் பற்றி நாம் நிச்சயம் சிந்திப்பதுண்டு. அப்படியிருக்கையில், பயணங்கள் மேற்கொள்ளும் போதும் சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்சம் அக்கறையாகத் தான் இருப்போம். நல்ல சத்தான உணவுகளை அப்போது உண்பதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.