Friday, March 27, 2015

ஸ்ரீசக்கரத்தின் மகிமை


எந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீசக்கரம் என்பது ஆன்றோர் வாக்கு. ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம், மனித குலத்துக்கு சங்கரரின் அருள்கொடை. காஞ்சி காமாட்சியம்மன் கோயில், திருவானைக்காவல், திருவொற்றியூர் போன்ற எண்ணற்ற தலங்களில் இந்த ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீசக்கரத்தின் மகிமை

மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமே ஸ்ரீசக்கரம். உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரி மகாமேருவில் உறைபவள். மகாமேருவின் உருவையே ஸ்ரீசக்கரத்தில் பொறிக்கிறார்கள். மகாசக்தியை மந்திரம், எந்திரம், தந்திரத்தால் வழிபடுவர். இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீசக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.

மூன்றின் பலம்

முக்காலங்கள், மும்மூர்த்திகள் அனைத்தும் அன்னையின் அமைப்புகளே. இதன்பொருட்டே திரிபுரசுந்தரியை மகாமேரு என்னும் மந்திரம், எந்திரம், தந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மூலம் வழிபடு கின்றனர். அனைத்து விதமான சக்கரங் களுக்கும் தலையாயது இந்த ஸ்ரீசக்கரம். அதன்பொருட்டே ஸ்ரீசக்கரத்தினை `ஸ்ரீசக்கர ராஜ’ என்றே ஆன்மிகத்தில் சிறந்த மகான்கள் குறிப்பிடுவர். ஒன்பது நிலைகளைக் கொண்ட ஸ்ரீசக்ரத்தினைப் பூஜிக்கும் முறை நவா ஆவரணம் என அழைக்கப்படும்.

முதல் ஆவரணம்

இந்த ஆவரணத்தின் கிரகமாக வியாழ பகவான் விளங்குகிறார். முதல் ஆவரணத்தை வணங்குபவர்களுக்கு எல்லா செல்வங்களும் நிலைக்கும். தடைகள் நீங்கும். புத்தி பலம் கூடும்.

இரண்டாவது ஆவரணம்

பதினாறு யோகினிகள் வாசம் செய்யும் தாமரைப் பூ ரூபம் இது. மனதின் தீய எண்ணங்கள் நீங்கும். அகம் தூய்மையாகும்.

மூன்றாவது ஆவரணம்

பூஜிப்பவரின் மனதை ஒருமுகப்படுத்தும் தேவதைகள் எட்டு தாமரை இதழ்களில் வாசம் செய்வதாக ஐதீகம். இவர்கள் பக்தியின் மேன்மையை பக்தர்களுக்கு அளிப்பவர்கள்.

நான்காவது ஆவரணம்

இந்த ஆவரணத்தில் 14 யோகினிகள் வாசம் செய்கின்றனர். சந்திரன் வடிவில் அன்னை காட்சி தருவாள். புத்திர பாக்கியத்தை அளிக்கும் ஆவரணம் இது.

ஐந்தாவது ஆவரணம்

பத்து கோணங்களில் பத்து யோகினிகள் வாசம் செய்கின்றனர். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் தரும்.

ஆறாவது ஆவரணம்

அன்னை சூரியனின் உருவில் இருக்கும் ஆவரணம் இது. பொறாமை இருளை அகற்றி, அருளின் ஒளியை ஏற்ற உதவும்.

ஏழாவது ஆவரணம்

புதன் கிரகம் அமையப்பெற்ற ஆவரணம். இந்த ஆவரணத்தை பூஜிப்பதின் மூலம் ஆத்ம ஞானம் பெருகும்.

எட்டாவது ஆவரணம்

மகா திரிபுரசுந்தரியாக அன்னை வீற்றிருக்கும் ஆவரணம் இது. அங்குசம், பாசம், கரும்பு வில் மற்றும் பாணம் ஆகிய அம்பாளின் நான்கு ஆயுதங்கள் இந்த ஆவரணத்தில் வழிபடப்படுகின்றன.

ஒன்பதாவது ஆவரணம்

பேரின்பத்தை நிலைபெறச் செய்யும் ஆவரணம் இது. அர்த்தநாரீஸ்வரர் வீற்றிருக்கும் இந்த ஆவரணத்தைப் பூஜிப்பதின் மூலம் சகல நன்மைகளும் ஏற்படும்.

Tuesday, March 3, 2015

நல்லதே நடக்கும்


உஙகள் பதிவுகளை .படிக்கிறேன்... ஆனால். . என் வாழ்க்கையில் ..எந்த முன்னேற்றமும் இல்லை ..என்று என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள். .. . அவர்களுக்காக இந்த பதிவு என் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் .அனைவரும் என் உறவுகளே... நீங்கள் நலம் பெற, வளம் பெற  உங்களுக்காக .இந்த பதிவு.

மனிதனா பிறந்திட்டாலே.. மூன்று பேர் நம்மை ஆட்டிப் படைகிறார்கள்...

1 பைத்தியகாரன் ..நம் வெளிமனம் ...இவன் எதுக்கு எங்க அலைகிறான் என்று தெரியாமல் எப்பொழுதும் அலைந்து கொண்டும் கிறுக்குதனமாக எப்பொழுதும் யோசித்துக் கொண்டே இருப்பவன்....

2 முட்டாள் இவர் நம் ஆழ்மனங்க.

நம்மளுக்குள் இருக்கும் பைத்தியகாரன் எதை வழுவாக நினைத்தாலும் இந்த முட்டாள் அதை அப்படியே உண்மை என நம்பி உங்கள் வாழ்க்கையில் அதை அப்படியே நிறைவேற்றி வைச்சுடுவான்... அதனால தான் அவனை முட்டாள் என்று சொன்னேன் மேலும் அவனுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாதுங்க.... நம்ம பைத்தியகாரன் (வெளிமனம் ) எதை பலமாக நினைச்சாலும் அதை அப்படியே உண்மை தான் என்று நினைத்து .. நம் வாழ்க்கையில் அப்படியே நடத்தி வச்சுடுவான்....

3 கோழை இவர்தான் நம்முள் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள். ..

இவர் வெளிமனமாகிய பைத்தியகாரன் . தப்பி தவறி நம்ம வாழ்க்கையில் சுக போகமாக இருக்க. . ..ஏதாவது ஆழ்மனமாகிய முட்டாளிடம் வலுவாக நடத்த ச் சொல்லும் போது ...இதெல்லாம் நடக்காது .. என ..... நம் ஆழ்மனதில் புல்லுருவியாய் புகுந்து ..... ..

நம் எண்ணங்களை வெற்றியை தடுப்பவன்.............

..இப்ப ஏன் நம் எண்ணங்கள். .செயல்கள் தோல்வி அடைகிறது என புரித்திருப்பீர்கள்.......

ஆக...மூன்றாவது ஆளாகிய. .எதிர்மறை எண்ணங்களை .. நம்முள் இருந்து நாம் .வெளியேற்றும் வரை ......நமக்கு வெற்றி காலதாமதம் ஆகும்.........

.எதிர்மறை எண்ணங்களை அகற்றுவோம் ... .எதிலும் வெற்றி பெருவோம்...

வெற்றி நமதே


இனிய இரவு வணக்கம் சகோதிரர்களே