Sunday, October 30, 2016

மூச்சில் இருக்கிறது சூட்சுமம்


பிணி, திரை, மூப்பு இல்லாத
வாழ்க்கை வேண்டும் என்பதே நீண்ட
நெடுங்காலமாக மனித குலத்தின்
ஆசையாக உள்ளது. அதற்கான
வழிமுறைகளைத் தேடும்
முயற்சிகளும் காலங் காலமாக
நடைபெற்று வருகின்றன. நவீன
மருத்துவ விஞ்ஞானமும் இதற்கான
விடையை முனைந்து தேடி வருகிறது;
இதுவரையில்
வெற்றி கிடைக்கவில்லை.
ஆனால் நமது முன்னோர்கள்
இதற்கான வழிமுறைகளைப்
பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்து விட்டனர்.
யோகாசனம், பிராணாயாமம்,
முத்திரைகள் என நம் முன்னோர்கள்
வகுத்து வைத்த வழிமுறைகள்
அனைத்துமே மூப்பு, திரை,
பிணி என அனைத்
தையுமே வெற்றி கொள்ளும்
மார்க்கங்களாகும்.
திருமந்திரத்தின் மூன்றாம்
தந்திரம் (மூன்றாம் பாகம்) முழுக்க
முழுக்க "அஷ்டாங்க யோகம்'
என்பதைக்
குறித்தே விவரிக்கிறது. பல
சூட்சும
ரகசியங்களை விளக்குகிறது.
"அஷ்டாங்கம்' என்ற வடமொழிச்
சொல்லுக்கு "எட்டு பிரிவுகள்'
என்பது பொருள். முழுமையான
யோகக்
கலையானது எட்டு அம்சங்களைத்
தன்னுள் கொண்டுள்ளது.
அவை முறையே-
1. இயமம்
2. நியமம்
3. ஆசனங்கள்
4. பிராணாயாமம்
5. பிரத்தியாகாரம்
6. தாரணை
7. தியானம்
8. சமாதி
இந்த ஒவ்வொன்றையும்
குறித்து மிக விரிவாக
திருமூலர்
தனது திருமந்திரத்தில்
விளக்கியுள்ளார்.
அவை அனைத்தையும் விவரிக்க
வேண்டுமென் றால் பல பாகங்கள்
கொண்ட ஒரு தனிப்
புத்தகமே எழுத
வேண்டியதிருக்கும்.
தற்போது "பிராணாயாமம்' எனும்
மூச்சுப்
பயிற்சி குறித்து திருமூலர்
கூறியுள்ள சில
உண்மைகளையும், சூட்சும
ரகசியங்களையும் மட்டும்
காணலாம்.
உயிருக்கு ஆதாரமாக
இருப்பது மூச்சுதான்.
எனவேதான் அதை "உயிர் மூச்சு'
என்கிறோம். மனிதன் உணவின்றி பல
நாட்கள் உயிர் வாழ முடியும். நீர்
இல்லாமற்கூட சில நாட்கள் உயிர்
வாழலாம். ஆனால்
காற்று (பிராணவாயு) இல்லாமல்
போனால் எட்டு நிமிடங்களில்
மரணம் நிச்சயம்! உடலின் இயக்கங்கள்
அனைத்திற்கும் இந்த மூச்சுக்
காற்றே ஆதாரம்.
"ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த்
தலைமகன்
உய்யக்கொண்டு ஏறும்
குதிரைமற்று
ஒன்றுண்டு
மெய்யர்க்கு பற்றுக் கொடுக்கும்
கொடாது போய்ப்
பொய்யரைத்
துள்ளி விழுந்திடும் தானே.'
(திருமந்திரம்)
நாம்
நமது ஐம்பொறிகளாலேயே இந்த
உலகை அளக்கிறோம்.
ஐம்பொறிகளின் வழியாகக்
கிடைக்கும் செய்திகளின்,
உணர்வு களின்
அடிப்படையிலேயே நமது செயல்பாடு களும்
அமைகின்றன. கண், காது, மூக்கு,
வாய், மெய் (தோல்) ஆகிய இந்த
ஐம்பொறிகளையே திருமூலர்
"ஐவர்' என்று குறிக்கிறார்.
இந்த ஐவர்க்கும் நாயகனாகவும், இந்த
ஐம்பொறிகளும் உறையும்
ஊருக்குத் (உடலுக்கு)
தலைவனாகவும் ஒருவன்
இருக்கிறானாம். நமது மனம்தான்
(அல்லது சித்தம்) இந்தத் தலைவன்!
தலைவன் வலுவாக இருந்தால்
ஐம்பொறிகளும், இந்தப்
பருவுடலும்
அவனுக்கு அடங்கி நடக்கும்.
தலைவன் வலுவற்றவனாக
இருக்கும் பட்சத்தில்
ஐம்பொறிகளும் தம் இச்சைக்குச்
செயல்படத் துவங்கிவிடும்.
உடலும் (ஊரும்) அந்தத் தலைவனின்
கட்டுப்பாட்டிற்குள் இராது.
இந்த மனம் எனும் தலைவன்
ஏறி வரும்
குதிரை ஒன்று உள்ளதாம். சித்தர்
இலக்கியங்க ளில் பல சங்கேத
மொழிகள் உபயோகத்தில் உள்ளன.
அவற்றுள் இந்த "குதிரை' என்பதும்
ஒன்று. வேகம், உறுதி,
இடைவிடாத ஓட்டம்
ஆகியவை குதிரையின்
தனிக்குணங்களாகும். குதிரைகள்
தூங்கும்போதுகூட
நின்று கொண்டேதான் தூங்கும்;
படுப்பதில்லை.
நோய்வாய்ப்படும்போது மட்டுமே குதிரைகள்
படுத்துக்கொள்ளும். இந்த
குணநலன்கள்
அனைத்துமே நமது மூச்சுக்
காற்றுக்கும் (பிராணன்)
பொருந்துகின்றன. எனவேதான்
சித்தர் இலக்கியங்களில் பல
இடங்களில்
மூச்சு அல்லது பிராணனைக்
குறிக்க "குதிரை' என்ற சங்கேதச்
(ரகசியம்) சொல்லை உபயோகப்
படுத்துகின்றனர்.
குதிரை அடிப்படையில்
ஒரு காட்டு விலங்கு. எளிதில்
கட்டுப்படாது.
ஒரு குதிரையைக் கட்டுக்குள்
கொண்டு வருவது என்பது மிகவும்
கடினமான ஒரு காரியம். அதில்
தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் பல
நாட்கள் போராடித்தான்
குதிரையை அடக்கி அதன் மேல்
ஏறி சவாரி செய்ய முடியும்.
ஒவ்வொரு முறையும் அதன் மேல்
ஏற முயற்சி செய்யும்போதும்
அது குப்புறத் தள்ளிவிடும்.
படிப்படியாகவே அதை அடக்க
முடியும்.
ஒருமுறை அதை அடக்கி வெற்றி கொண்டு சேணத்தைப்
பூட்டிவிட்டால், தனது வாழ்நாள்
முழுவதும் அந்தக்
குதிரை தனது எஜமானனுக்கு விசுவாசமுள்ள
துணையாக இருக்கும். மூச்சுக்
காற்றும் அவ்வாறே! அடக்குவதும்
ஆள்வதும் மிக மிகச் சிரமமான
காரியம். இந்த மூச்சு எனும்
குதிரை யாருக்கு அடங்கும்?
இறைவனின்
திருவடிகளையே பற்றிக்
கொண்டு மெய்ஞ்ஞான வழியில்
செல்லும்
மனிதர்களுக்கே (மெய்யர்க்கு) இந்த
குதிரை வசப்படுமாம்! உலக
மாயைகளில் சிக்கி, இறை நாட்டம்
கொள்ளாது வாழும்
பொய்யர்களை இந்த சண்டிக்
குதிரை கீழே தள்ளிவிடுமாம்.
இந்த ஒரு பாடலில் திருமூலர் பல
சூட்சுமமான
விஷயங்களை விளக்கியிருக்கிறார்.
அவற்றை சுருக்கமாகக் காண்போம்.
* ஐம்பொறிகளையும் ஆளும்
தலைவன்- சித்தம் (மனம்).
* இந்த மனம்
ஒருநிலைப்பட்டு உறுதியா னால்
மட்டுமே ஐம்புலன்களும்,
பருவுடலும் அந்த சித்தத்தின்
கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
இதுவரையில் படைப்பின்
சூட்சுமங்களை யும்
கரு உருவாவதில் இருக்கும்
ரகசியங்களையும்
குறித்து திருமூலரின் சில
கருத்துகளைக் கண்டோம்.
இனி வேறு சில சூட்சும ரகசியங்
களைக் காணலாம்.
பிணி, திரை, மூப்பு இல்லாத
வாழ்க்கை வேண்டும் என்பதே நீண்ட
நெடுங்காலமாக மனித குலத்தின்
ஆசையாக உள்ளது. அதற்கான
வழிமுறைகளைத் தேடும்
முயற்சிகளும் காலங் காலமாக
நடைபெற்று வருகின்றன. நவீன
மருத்துவ விஞ்ஞானமும் இதற்கான
விடையை முனைந்து தேடி வருகிறது;
இதுவரையில்
வெற்றி கிடைக்கவில்லை.
ஆனால் நமது முன்னோர்கள்
இதற்கான வழிமுறைகளைப்
பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்து விட்டனர்.
யோகாசனம், பிராணாயாமம்,
முத்திரைகள் என நம் முன்னோர்கள்
வகுத்து வைத்த வழிமுறைகள்
அனைத்துமே மூப்பு, திரை,
பிணி என அனைத்
தையுமே வெற்றி கொள்ளும்
மார்க்கங்களாகும்.
திருமந்திரத்தின் மூன்றாம்
தந்திரம் (மூன்றாம் பாகம்) முழுக்க
முழுக்க "அஷ்டாங்க யோகம்'
என்பதைக்
குறித்தே விவரிக்கிறது. பல
சூட்சும
ரகசியங்களை விளக்குகிறது.
"அஷ்டாங்கம்' என்ற வடமொழிச்
சொல்லுக்கு "எட்டு பிரிவுகள்'
என்பது பொருள். முழுமையான
யோகக்
கலையானது எட்டு அம்சங்களைத்
தன்னுள் கொண்டுள்ளது.
அவை முறையே-
1. இயமம்
2. நியமம்
3. ஆசனங்கள்
4. பிராணாயாமம்
5. பிரத்தியாகாரம்
6. தாரணை
7. தியானம்
8. சமாதி
இந்த ஒவ்வொன்றையும்
குறித்து மிக விரிவாக
திருமூலர்
தனது திருமந்திரத்தில்
விளக்கியுள்ளார்.
அவை அனைத்தையும் விவரிக்க
வேண்டுமென் றால் பல பாகங்கள்
கொண்ட ஒரு தனிப்
புத்தகமே எழுத
வேண்டியதிருக்கும்.
தற்போது "பிராணாயாமம்' எனும்
மூச்சுப்
பயிற்சி குறித்து திருமூலர்
கூறியுள்ள சில
உண்மைகளையும், சூட்சும
ரகசியங்களையும் மட்டும்
காணலாம்.
உயிருக்கு ஆதாரமாக
இருப்பது மூச்சுதான்.
எனவேதான் அதை "உயிர் மூச்சு'
என்கிறோம். மனிதன் உணவின்றி பல
நாட்கள் உயிர் வாழ முடியும். நீர்
இல்லாமற்கூட சில நாட்கள் உயிர்
வாழலாம். ஆனால்
காற்று (பிராணவாயு) இல்லாமல்
போனால் எட்டு நிமிடங்களில் ப்
மனதை இயக்குவது மூச்சுக்
காற்று (பிராணன்).
*இந்த மூச்சுக்
காற்றை வசப்படுத்து பவர்களுக்கு மட்டுமே மனம்
ஒருமுகப்படும்.
* இறைவனைப் பற்றிக்
கொண்டு மெய்ஞ் ஞான வழியில்
செல்பவர்களுக்கு மட்டுமே மூச்சு கட்டுப்படும்.
* பொய்ஞானம் எனும் மாயைகளில்
சிக்குண்டு உழலுபவர்களுக்கு மூச்சு,
மனம், ஐம்பொறிகள், பருவுடல்
ஆகிய எதுவுமே வசப்படாது.
முக்தி நிலையும்
இவர்களுக்கு சாத்தியப்படாது.
குருவின் துணை
நாம் பிறந்தது முதல்
இறப்பது வரையில்
ஒவ்வொரு நாளும்
ஏதாவது ஒன்றைப் புதிதாகக்
கற்றுக்கொள்கிறோம். பல
விஷயங்களைப் பிறர் சொல்லிக்
கொடுக்கக் கற்றுக்கொள்கிறோம்.
சிலவற்றை பிறரைப் பார்த்துக்
கற்றுக்கொள்கி றோம். இவை தவிர
சிலவற்றை இயற்கையை உற்று நோக்கியும்கூட
கற்றுக்கொள்கிறோம். புதிதாக
ஒன்றைக் கற்றுத்தரும்
ஒவ்வொருவருமே நமக்கு ஒரு குருதான்!
கல்விக்கு குருவின் துணை மிக
அவசியம். அதைவிடவும் ஞானத்
தேடலில்- ஞானம் தேடிய
பயணத்தில் ஒரு குரு மிக மிக
அவசியம். பிராணா யாமம் எனும்
மூச்சுப் பயிற்சியை முறையாகக்
கற்றுக்கொள்ள
ஒரு குரு கட்டாயமாகத் தேவை.
இதை கீழ்க்கண்ட திருமந்திரப் பாடல்
வலியுறுத்துகிறது.
"ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகு அறிவார்
இல்லை
கூரிய நாதன் குருவின் அருள்
பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.'
(திருமந்திரம்)
"மனம்' என்பதை "ஆரியன்' என்ற
சொல்லால் திருமூலர்
குறிப்பிடுகிறார். இந்த
மனமானது மிக நல்லதாம். இந்த
மனதிடம் இரண்டு குதிரைகள்
உள்ளதாம். முதல் பாடலில்
ஒரு குதிரை உண்டு எனக் கூறிய
திருமூலர் அடுத்த
பாடலிலேயே இரண்டு குதிரைகள்
உள்ளதாகக் கூறுகிறாரே,
இது என்ன முரண்பாடு என்ற
கேள்வி எழுகிற தல்லவா?
இங்கேதான் மூச்சு குறித்த
அடுத்த சூட்சும ரகசியம்
பொதிந்து கிடக்கிறது.
முதல் பாடலில் "குதிரை'
என்பது மூச்சு அல்லது பிராணனைக்
குறிக்கிறது. இந்தப் பாடலில்
அது நமது இடது நாசி,
வலது நாசி ஆகிய இரண்டையும்
குறிப்பதாக எடுத்துக் கொள்ளாம்.
இதுவே இரண்டு குதிரைகள்.
அல்லது இடது நாசி வழியாகச்
செல்லும் மூச்சுக்
காற்றை ஒரு குதிரை எனவும்,
வலது நாசி வழியாகச் செல்லும்
மூச்சுக்
காற்றை மற்றொரு குதிரை எனவும்
பொருள் கொள்ளலாம்.
பிராணன் என்பது ஒன்றுதானே?
வலது நாசியில் செல்லும்
மூச்சுக்கும், இடது நாசியில்
செல்லும் மூச்சுக்கும்
வித்தியாசம் இருக்க
முடியுமா என்ற கேள்வி உங்கள்
மனதில்
இப்போது எழுந்திருக்கும். ஆம்;
இரண்டு நாசிகளிலும் செல்லும்
மூச்சுக் காற்றுக்கு தனித்தனித்
தன்மைகளும், செயல்பாடுகளும்
உள்ளன. எனவேதான் திருமூலர்
அதைப் பாகுபடுத்திக் காட்ட
இரண்டு குதிரைகள் என்றார்.
நாம் நமது இரண்டு நாசித்
துவாரங்களின் வழியாகவும்
ஒரே நேரத்தில் சுவாசிப்பதாக
ஒரு தவறான
கருத்து நம்மிடையே உள்ளது.
உங்களது சுவாசத்தை உற்றுக்
கவனித்துப் பாருங்கள். இதிலுள்ள
உண்மை புரியும்.
ஒரு நேரத்தில் ஒரு நாசியின்
வழியாகவே அதிகப்படியான
காற்று உள்ளே செல்லும். (அடுத்த
நாசியில் மிகச் சிறய அளவிலான
காற்று உட்புகும்.)
சற்று நேரத்திற்குப்பின்
(இரண்டு மணி நேரத்திற்குப் பின்)
அடுத்த நாசி வழியாக
காற்று செல்லத் துவங்கும்.
இவ்வாறு ஒரு நாளில்
இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என
மொத்தம் 12 முறை இந்த இடம்
மாறுதல் நடைபெறும். எந்த
நேரத்தில் எந்த நாசியில்
காற்று செல்லும் என்பதையும் நம்
முன்னோர் கள்
கணித்து வைத்துள்ளனர்.
நேரம் நாசி
காலை 6-8
மணி வரை வலது நாசி.
காலை 8-10
மணி வரை இடது நாசி.
காலை 10-12
மணி வரை வலது நாசி.
மதியம் 12-2
மணி வரை இடது நாசி.
மதியம் 2-4 மணி வரை வலது நாசி.
மாலை 4-6
மணி வரை இடது நாசி.
மாலை 6-8
மணி வரை வலது நாசி.
இரவு 8-10 மணி வரை இடது நாசி.
இரவு 10-12
மணி வரை வலது நாசி.
இரவு 12-2 மணி வரை இடது நாசி.
இரவு 2-4 மணி வரை வலது நாசி.
அதிகாலை 4-6
மணி வரை இடது நாசி.
வலது நாசியின் வழியாக
உள்ளே செல்லும்
காற்றிற்கு சூரிய கலை என்றும்;
இடது நாசியின் வழியாக
உள்ளே செல்லும்
காற்றிற்கு சந்திர கலை என்றும்
நமது முன்னோர்கள் பெயர்
சூட்டியுள்ளனர். இந்த
இரண்டு சுவாசங்களுக் கும்
தனித்தனிப் பண்புகளும்
வெவ்வேறு வகையான
செயல்பாடுகளும் உள்ளன.
வலது நாசிக் காற்று (சூரிய கலை)
* உடலுக்குத் தேவையான வெப்ப
சக்தியைத் தருகின்ற பிராணன்
இதுவே.
* வலது நாசியின் வழியாக
சுவாசம் நடைபெறும்
காலகட்டத்தில் உடலின் வெப்ப
நிலை சற்றே உயரும்.
* உடல் சுறுசுறுப்படையும்;
சோர்வு அகலும்.
* உடலின் வலிமை அதிகரிக்கும்.
* மூளையும் உடலும் பரபரப்பாக
இயங்கும்.
* இந்த இரண்டு மணி நேரத்தில்
நிதானம் குறைவாகவும், வேகம்
அதிகமாகவும் இருக்கும்.
இடது நாசிக் காற்று (சந்திர கலை)
* உடலைக் குளிர்விக்கும்
தன்மை கொண்டது.
* சந்திரனைப் போன்றே இந்த
மூச்சுக் காற்றும்
குளுமையானதாகும்.
* இடது நாசி வழியே சுவாசம்
நடைபெறும் வேளையில் உடலின்
வெப்ப நிலை சற்றே குறைந்து,
உடல் குளிர்ச்சியடையும்.
* பரபரப்புத் தன்மை குறைந்து,
மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத்
தன்மை உருவாகும்.
* மூளை அமைதியாக சிந்திக்கத்
துவங்கும்.
* அவசரத் தன்மை மறைந்து,
நிதானமான மனநிலை நிலவும்.
இந்த இரண்டு வகையான
மூச்சுகளையும்
(குதிரைகளையும்) அடக்கி ஆளக்
கற்றுக் கொண்டால், மனம்,
ஐம்பொறிகள், பருவுடல் ஆகிய
அனைத்துமே நம்
கட்டுப்பாட்டிற்குள் வரும். ஆனால்
இவற்றை அடக்கும் சூட்சுமம்
எவருக்கும்
தெரிவதில்லை என்பதையே இந்தப்
பாடலின்
இரண்டாவது வரி தெரிவிக்கிறது.
"வீசிப்பிடிக்கும் விரகு (உபாயம்,
வழிமுறை) அறிவார் இல்லை.'
இந்த சூட்சுமங்களைக்
கற்றுக்கொண்டு, பிராணன் எனும்
குதிரைகளை வசப்படுத்த
ஒரு குருவின்
துணை வேண்டும். அந்த
குருவும்
நுண்ணறிவு படைத்தவராக, அந்தக்
கலையில் முழுமை பெற்றவராக
இருத்தல் வேண்டும். இந்தக்
கருத்தே கடைசி இரு வரிகளில்
வெளிப் படுகிறது.
"கூரிய நாதன் குருவின் அருள்
பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.'
இதில் "அருள் பெற்றால்' என்ற
சொற்களிலும் ஒரு சூட்சுமம்
உள்ளது. குருவிடம்
சென்று கற்றுக்கொள்வது வேறு;
அவரது அருளைப்
பெறுவதென்பது வேறு.
நீங்களே இதை ஆழமாகச்
சிந்தித்துப் பாருங்கள். இதிலுள்ள
சூட்சும ரகசியங்கள் புரியும்.