Wednesday, April 15, 2015

கருமச் சட்டம்




கருமச் சட்டம் மௌனமாக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது.
உயிர்களின் தோற்றம் பற்றி விஞ்ஞான பூா்வமாக ஆராய்ந்து, தான் கண்ட உண்மைகள்

சின்னஞ்சிறிய அமீபா என்ற உயிர் அணுவிலிருந்து உயிர்கள் படிப்படியாகத் தோன்றின. பரிணாம வளர்ச்சிப்படி

படிப்படியாக வளர்ந்து குரங்கு நிலைக்கு வந்தன. கடைசியாக மனிதக் குரங்கிலிருந்து உருவானவன்தான் மனிதன்.

இந்த உயிர்களிடையே வாழ்க்கைப் போராட்டம் நடந்தபடி இருக்கிறது. இந்தப் போராட்டத்தில் வலிமையானவை வாழ்கின்றன. வலிமையற்றவை வீழ்ந்து மடிகின்றன.

மனித சமுதாயத்திலும் உடல் பலம், மூளை பலம் மிக்கவன் தான் வாழ்வில் ஜெயிக்கிறான். முடியாதவன் தோற்று மடிகிறான் என்பது ஓருவாதம்!

அப்படியானால் உண்மை, நோ்மை, நீதி, நியாயம், பாவம், புண்ணியம், ஒழுக்கம் என்பன எல்லாம் எதற்கு?

இதெல்லாம் சமுதாயத்தை ஒரு கட்டுக் கோப்பில் வைத்திருக்க மனிதா்களே விதித்துக் கொண்ட ஏற்பாடுகள்! சமுதாயத்தில் குழப்பங்கள் வராமலிருக்க சமூகம் செய்து கொண்ட கட்டுப்பாடுகள் என்பது ஒரு வாதம்

நடைமுறை வாழ்வில் பாருங்கள்! அநியாயம், அக்கிரமம் செய்பவன் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறான்? உண்மை, நீதி, நோ்மை, பாவ புண்ணியத்துக்குப் பயந்து வாழ்பவன் படாத கஷ்டம் பட வேண்டியிருக்கிறது அல்லவா? என்று கேட்கிறார்கள்.
புலன்களை அடக்கி, மனதை ஒடுக்கி, தனிமையில் இருந்து தியானம், தவம் மேற்கொண்டு உயிர்களின் தோற்றம், வளா்ச்சி, முடிவு பற்றி உள்ளுக்குள்ளே ஆராய்ந்தார்கள். அவா்களுக்குச் சில விடைகள் கிடைத்தன.

ஆன்மா என்ற ஒரு சக்தி உண்டு. அது இறைவனிடமிருந்து வெளிப்பட்டது. அது உலகில் ஒரு உடம்போடு பிணைக்கப்பட்டு வாழ்கிறது.அது புல்லாகிப் பூண்டாகிப் பறவையாய், பாம்பாய், விலங்காய், கல்லாய், மனிதராய், தேவராய், அசுரராய்ப் பல்வேறு உடம்புகளையும், வடிவங்களையும் எடுத்து உழல்கிறது. ஓரறிவுள்ள உயிரிலிருந்து படிப்படியாக முன்னேறி வருகிறது. மனித நிலைக்கு வந்த உயிர் பாவ, புண்ணியக் கணக்குப்படி மீண்டும் ஒரு உடம்பு எடுத்துக் கொண்டு பிறக்கிறது. மனிதன் தான் தெய்வ நிலையை அடைய வேண்டும்.

எந்த ஒரு மூலத்திலிருந்து இந்த உயிர் வந்ததோ, அந்த மூலத்தை நாடி அறிந்து கொண்டு அதில்போய் ஐக்கியம் ஆகிவிட வேண்டும். அவ்வாறு ஐக்கியம் ஆகிறவரை இந்த உயிர் பிறப்புக்கும் இறப்புக்கும் ஆளாகிறது. எனவே, மனிதன் இந்த உண்மையைப் புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டும். வாழ்க்கை வட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு உயிரும் இந்த வட்டத்தை முடித்தே ஆக வேண்டும். போய்க்கொண்டும் இருக்க வேண்டியவா்களே மீண்டும் பிறப்பு! மீண்டும் இறப்பு!

புனரபி ஐனனம்! புனரபி மரணம்! ஏ! முராரி! இந்தச் சங்கிலித் தொடரிலிருந்து நான் விடுபடுவது எப்போது? என்று ஆதி சங்கரா் ஆண்டவனிடம் கேட்கிறார்.

எல்லாமே கருமச் சட்டப்படிதான் நடக்கின்றன. இந்த உயிர் வாழ்க்கையும் கருமச் சட்டப்படிதான் நடக்கிறது. பரம்பொருளின் திட்டப்படிதான் நடக்கிறது. எல்லாம் காரண காரியப்படி ஒழுங்காகத்தான் நடக்கிறது. இதெல்லாம் பரம்பொருளின் விளையாட்டு.

ஆன்மாவின் பயணம் மிக மிக நீண்டது! மிக மிக நெடியது.

கண்ணன் அருச்சுனனுக்குச் சொல்கிறான். அருச்சுனா! உனக்கும் எனக்கும் எத்தனையோ பிறவிகள் கழிந்தன. அது எனக்குத் தெரியும். உனக்குத் தெரியாது.

அவனவன் கா்ம வினைக்குத் தக்கபடி வேடங்கள் கொடுக்கப்படுகின்றன. வாழ்க்கை ஒரு நாடகம்! உனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை ஒழுங்காக நடித்துவிட்டுப் போ! வாழ்க்கை ஒரு விளையாட்டு நீ விதிகளின்படி ஆடிவிட்டுப் போ! அழுகல் ஆட்டம் ஆடி அடாவடித்தனம் பண்ணி ஜெயிக்க நினைக்காதே!

மரணம் என்பது என்ன? இந்த உடம்பை உதறிப் போட்டுவிட்டு அடுத்த ஒரு பிறவிக்கான ஏற்பாடு! அடுத்த ஒரு பயணத்துக்கு ஆயத்தம்

ஒரே பிறவியில் ஒருவன் எல்லாம் தெரிந்து கொண்டு முழுமை அடைய முடியாது என்பதால்தான் பல பிறவிகள் கொடுக்கப்படுகின்றன. பாவ புண்ணியக் கணக்குப்படி இன்ப, துன்ப அனுபவங்கள் அளிக்கப்படுகின்றன.

அவனுக்கு அப்படி? எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று வாதாடிப் பயனில்லை. உன் வாதம் எந்தக் கோட்டைக்குப் போயும் ஜெயிக்காது!

புண்ணியம் செய்தால் இன்னொரு நல்ல உடம்பு! இன்னொரு உலகம்! பாவமே செய்தால் இன்னொரு உடம்பு! இன்னொரு உலகம்! இப்படித்தான் ஆன்மா வேறு ஒரு உடம்பு! வேறு ஒரு பிறவி வேறு ஒரு உலகம் என்று நீண்ட நெடிய பயணத்தில் சஞ்சரித்தபடி இருக்கிறது.

ஞானம் உள்ளவன் இந்த உண்மையைப் புரிந்து கொண்டான், அஞ்ஞானி விஞ்ஞானம் பேசிக் கொண்டு மதி மயங்கிக் கிடக்கிறான். மற்றவா்களையும் மயக்குகிறான்.

மொத்தத்தில் இந்த வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு! இந்த ஆட்டத்தில் ஏணியும் உண்டு. பாம்பும் உண்டு. புண்ணியம் என்ற ஏணி மேலே ஏற்றுகிறது. பாவம் என்ற பாம்பு கீழே தள்ளுகிறது. இப்படி ஏறுவதும், இறங்குவதுமாகவே வாழ்க்கை தொடா்கிறது.

பரம பதத்தை அடையும் வரை இந்த விளையாட்டுத் தொடா்கிறது.

மனிதன் புண்ணியம் அதிகம் செய்து தெய்வ நிலைக்கும் உயரலாம்.

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிப் பன்றியாகப் பிறந்து தாழ்ச்சியும் அடையலாம்.

மனித நிலைக்கு முன்னேறி வந்துவிட்ட ஒருவன் மீண்டும் மிருகமாகப் பிறப்பானா? பிறப்பான்………………….

இளைஞா் ஒருவா், எதற்கெடுத்தாலும் எல்லாம் உன் ஊழ்வினை! கா்மவினை என்று சொல்லிகொள்கிறா்கள் ஏன்

எனக்கு மட்டும்தான் ஊழ்வினைச் சட்டமா? அநியாயம், அக்கிரமம் செய்பவனெல்லாம்

கோடி கோடியாய்ச் சம்பாதிக்கிறான். நல்லா இருக்கிறான். இந்த இறைவன் அவனையெல்லாம் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.

நான் போனால் மட்டும் எல்லாம் உன் ஊழ்வினை! என்று சொல்லித் தட்டிக் கழிக்கிறது என்று சொல்லி அலுத்துக் கொள்வார். சலிப்புற்றுப் பேசுவார்.

ஒருநாள் அம்மா அருள்நிலையில் வெளிப்பட்டாள். அந்த இளைஞரை அழைத்தாள். அப்போது புற்று மண்டபத்தின் கட்டைச் சுவருக்கு வெளியே ஒரு சொறி நாய் சுருண்டு படுத்தபடி இருந்தது.

“இது என்னடா மகனே!” என்று கேட்டாள்.

அம்மா! இது ஒரு நாய்! என்றார் அவா்.

அம்மா, சொறி நாய்! என்று திருத்திச் சொல்லி, இது யார் என்று தெரியுமாடா உனக்கு? என்று கேட்டாள். அந்த இளைஞா் விழித்தார்.

“ஒரு கோடீஸ்வரனாக இருந்த ஆத்மாடா இது” என்றாள்.

அலுத்துக் கொண்ட அந்த இளைஞருக்கு அதுதான் பதில்!

பணம், பதவி, செல்வாக்கு அதிகாரம் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு ஆடாத ஆட்டம் ஆடுகிறவன் உலகியலில் ஜெயித்தவன் என்று உலகம் கருதுகிறது.

நியாயம், நோ்மை, உண்மை, தெய்வ பயம், பாவ புண்ணியத்தில் நம்பிக்கை கொண்டு அடக்கமாக வாழ்பவனை இளிச்சவாயன் என்று உலகம் கருதுகிறது.

கருமச் சட்டம் கணக்காகத்தான் வேலை செய்கிறது என்று மெய்ஞ்ஞானிகள் புரிந்து வைத்திருக்கிறார்கள். பிறவி ரகசியங்களை உணா்ந்து வைத்திருக்கிறார்கள்.

எருமை மாட்டின் முற்பிறவி

திருவண்ணாமலையில் வாழ்ந்தவா் சித்தா் சேஷாத்திரி சுவாமிகள். அவா் ஒரு நாள் அழுக்குடன் கூடிய துா்நாற்றம் கொண்ட, சேறுள்ள குட்டையின் அருகில் வந்து கொண்டிருந்தார். அக்குட்டையில் ஓா் எருமை, மிகுந்த ஆனந்தமாக விழுந்து கிடந்தது.

சுவாமிகள் அதனைப் பார்த்ததுதான் தாமதம்! உடனே தன் வேட்டி, சட்டை, துண்டு எதையும் கழற்றாமல் அப்படியே இறங்கி விட்டார். இறங்கியது மட்டுமன்றி,அந்த எருமையைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து. இழுத்துக் கொண்டு கரைக்கு வந்தார். வந்ததும் உடம்பு முழுவதும் சேறு பதிய தழுவிக் கொண்டு மீண்டும் கொஞ்சிக் குலவினார்.

அன்பா் ஒருவா் சுவாமிகளிடம் கேட்டார். “சாமி! என்ன இப்படி அசிங்கமான செயலைச் செய்து கொண்டு இருக்கிறீா்கள்” என்றார். அதுகேட்டுப் புன்முறுவலுடன் சுவாமிகள், “இது என்ன வெறும் எருமை மாடு என்றா நினைத்துக் கொண்டாய்? போன பிறவியில் இவனக்கு இன்ன பெயா், இந்த இடத்தில் எப்படி வாழ்ந்தவன் தெரியுமா? எனக்கு உயிர் நண்பன் என்று சொல்லிக் கொண்டே அணைத்து முத்தம் கொடுத்துப் பரவசத்தில் ஆழ்ந்தே போனார்.

கருமச் சட்டம் மௌனமாக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது.

பாவ, புண்ணியக் கணக்கை வைத்தே உயிர்கள் இயங்குகின்றன. அனுபவம் பெற வந்திருக்கின்றன. எங்கே……. எப்போது……. என்ன செய்தோம் என்பது எதுவும் நமக்குப் புரிவதில்லை. அதனால் எல்லாமே புதிராக இருக்கிறது.

கண்ணதாசன் அழகாகப் பாடினார்.
எங்கே வாழ்க்கை தொடங்கும் – அது
எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை இதுதான் பயணம்

என்பது யாருக்கும் தெரியாது. பாதை யெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்து விடும் மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும்!”

இந்த கதையின் கருத்து அடியேனுக்கும் உள்பட

=============================

முடிசார்ந்தமன்னரும்முடிவில் 

பிடிசாம்பல்என்பதைமறவாதிருமனமே 

இனிய வணக்கம் .