Friday, September 27, 2013

எங்கும் வெற்றி எதிலும் வெற்றி எப்படி?

எது குறித்தும் எஞ்சாதீர்கள்
எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு

ஆறிவுக்குள் உணர்ச்சியும் உணர்ச்சிக்குள் அறிவுமாகப் பின்னப்பெற்றுள்ள ஓர் அழகான பின்னல் ஆடையே நம் வாழ்க்கை

அறிவு நம் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுக்கிறது. உணர்ச்சி, அந்த இலக்கணத்தின் வழியே பொங்கும் இலக்கியமாகச் சுழன்று வெளிப்படுகிறது.

அறிவு நம் வாழ்க்கை என்னும் சக்கரமாகச் சுழன்று நம் இன்ப துன்பப் பயணத்தை நடத்தித்தருகிறது.

இந்த வாழ்க்கைப் பயணத்தில் எங்காவது தடை நேர்கிறது என்றார்... அந்தத் தடைக்கு அறிவு உணர்ச்சி என்னும் இந்த இரண்டு அம்சங்களில் ஏதோ ஒன்றில் தொழில் நுட்பச் சிக்கல் Technical Fault ஏற்பட்டுள்ளது என்பதே பொருள்

எந்த மாற்றத்திற்கும் தயார் என்ற ஊக்கத்துடன் மனத்தை வெட்டவெளியாகத் திறந்து வைத்திருப்போர்க்கு எந்த வெற்றியும் இந்த உலகில் எளிதாக வாய்க்கும்.

நான் எந்த விதத்திலும் மாறமாட்டேன். மற்றவர்கள்தாம் எனக்காக மாற வேண்டும் என்று அடம் பிடிப்போர்க்குத்தான் எல்லாமே கிக்கலாகத்தென்படும்.

மாறமாட்டேன் என்று அடம் பிடிக்கும் அந்தப் பிடிவாத மனத்திற்குப் பெயர்தான் விதி... வினைப்பயன்... துரதிர்ஷ்டிம் என்பன போன்ற பல பெயர்கள் வைத்துள்ளோம்.

சமையலில் உப்பு சற்று அதிகமாகத் தெரிந்தால் தண்ணீரைச் சேர்த்துச் சரி செய்யலாம். தண்ணீர் அதிகமாகிச் சப் பென்று இருந்தால் சிறிது உப்புச் சேர்த்துச் சரிசெய்யலாம்.

அதுபோல் உணர்ச்சிசார்ந்த சிக்கல்களுக்குச் சிறிது அறிவைக் கலந்தால் சரியாகிவிடும். அறிவு சார்ந்த சிக்கல்களுக்குச் சிறிது உணர்ச்சியைக் கலந்தால் சரியாகிவிடும்.

எல்லாமே தொழில் நுட்க் கோளாறு Techinical Fault தான்.

எனவே, எதற்கும் அஞ்சாதீர்கள் எல்லாவற்றுக்கும் தீர்வு உண்ட. இதைத் தெளிவுபடுத்துவதே எங்கும் வெற்றி எதிலும் வெற்றி எப்படி... என்ற இந்த நூலின் நோக்கம்.

படியுங்கள் பின்பற்ற முயலுங்கள் பயன் பெறுங்கள்.

வாழ்க வளமுடன்.


Wednesday, September 25, 2013

பொன்னும், பொருளும் நல்கும் பதிகம்

 http://3.bp.blogspot.com/-0EqrJo67Ypk/UYSNPKi7NqI/AAAAAAAAC9E/bpgmEIsqT7o/s1600/Pic+-+Swarna+Bhairava+-+574954_610515832296235_1245723330_n.jpg


 தலம்: திருவாவடுதுறை                                      பண்: காந்தார பஞ்சமம்

இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே

 இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மற்வேன் அம்மான்
புனல்விரி நறுங் கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாது என்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடியலால் ஏத்தாது என்நா
ஐந்தலை அரவுகொண்டு அரைக்கசைத்த
சந்த வெண் பொடியணி சங்கரனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாது என்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழல் எழ விழித்தவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

பேரிடர் பெருகி ஓர் பிணிவரினும்
சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடியலால் உரையாது என்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தா உன் அடி அலால் அரற்றாது என்நாப்
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
இலைநுனை வேற்படை யெம் இறையை
நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்

வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன் ஏறுவர் நிலமசை நிலையிலரே.

திருச்சிற்றம்பலம்

ஆக்கம்: திருஞானசம்பந்தர்



பொருளிலாதவர்க்கு இவ்வுலகம் இல்லை; அருளிலாதவர்க்கு அவ்வுலகம் இல்லை என்ற கூற்றின் படி பொன்னும் பொருளும் இல்லையெனில் இவ்வுலக வாழ்க்கை என்பது சிரமமான ஒன்றாகும். தெய்வ அருள் இல்லையெனில் விண்ணுலகம் கிட்டாது என்பது திண்ணம்.

நீங்கள் மேலே காண்பது பொன்னும் பொருளும் நல்கும் பதிகமாகும். இதனை தினமும் படித்துவர பொன்னுக்கும் பொருளுக்கும் ஒரு போதும் குறைவிருக்காது.

மேற்கண்ட பதிகத்தை தினமும் சொர்ண பைரவர் அல்லது உமாமகேஸ்வரர் பெருமான் படத்தின் முன்பு 1 முறை பாராயணம் செய்து வர பொன் மற்றும் பொருள் இவற்றின் சேர்க்கை உண்டாகும். வறுமை என்பதே இல்லாமல் ஓடிவிடும்.

முதன்முதலில் ஆரம்பிக்கும் நாள் தேய்பிறை அஷ்டமியாக இருத்தல் மிகவும் நன்று. முதன் முதலில் சிவதலத்தில் கொடிமரத்தின் அருகே ஒரு மஞ்சள் துண்டின் மீது அமர்ந்து 9 முறை பாராயணம் செய்யவும். பின்பு வீடு திரும்பி சொர்ணபைரவர் அல்லது உமாமகேஸ்வரர் படத்தின் முன்பு 1 முறை பாராயணம் செய்து வரவும்.

மறுநாளிலிருந்து தினமும் வீட்டில் 1 முறை பாராயணம் செய்து வந்தால் போதுமானது. இல்லறத்தில் வறுமை நீங்கி இல்லறம் நல்லறமாக நடக்க நியாமான வழியில் பொன்னும் பொருளும் வந்து சேரும்.

முதலில் குலதெய்வத்தை வணங்கவும். பின்பு விநாயகரை வணங்கவும். அதன் பின்பு உங்களின் இஷ்ட தெய்வத்தை வணங்கவும். பிறகு சிவபெருமானை வணங்கவும். திருச்சிற்றம்பலம் என்று கூறி பின்பு பதிகத்தை பாடவும். பாடி முடித்தவுடன் திருச்சிற்றம்பலம் என்று கூறி முடிக்கவும்.

மேற்கண்ட பதிகத்தை பாடும் போது இறைவனுக்கு எவ்வித படையல்களும் தேவையில்லை. இலுப்பை எண்ணெய் தீபம் இரண்டு மட்டும் போதுமானது. ஏனெனில் பதிகங்கள் படையல் பொருட்கள் மற்றும் வேள்விகள் செய்யாமலே நமது விருப்பங்களை இறைவனிடம் எடுத்துரைக்கக்கூடியவவை.

படையல் பொருட்கள் மற்றும் வேள்விகள் இவற்றிற்கு தான் மந்திரம் தேவை. மந்திரங்கள் தான் படையல்கள் மற்றும் வேள்விகள் மூலம் நமது விருப்பங்களை இறைவனுக்கு எடுத்துரைக்கக்கூடியவை.

திருஞானசம்பந்தரும் அவரது தந்தை சிவபாத இருதயரும் திருவாவடுதுறை தலத்தில் தங்கியிருக்கும் போது, சிவபாத இருதயர் தன் வேள்விக்காக தனது மகன் திருஞானசம்பந்தரிடம் பொன்னும், பொருளும் கேட்டார். சம்பந்தர் திருவாவடுதுறை இறைவன் மாசிலாமணீஸ்வரர் பால் மேற்கண்ட பதிகத்தைப் பாடினார்.
                                                                                                                                                   இப்பதிகத்தை கேட்ட இறைவன் அகமகிழ்ந்து தனது பூதகணங்களுக்கு கட்டளையிட, பூதகணங்கள் அள்ள அள்ள என்றும் குறையாத 1000 பொற்காசுகள் கொண்ட உலவாக்கிழியை பலிபீடத்தில் வைத்தன. அதனை எடுத்து சம்பந்தர் தம் தந்தைக்கு தந்தார். அப்பொற்காசுகளைக் கொண்டு சிவபாத இருதயர் சீர்காழி தலத்தில் இறைவனை நோக்கி வேள்வி நடத்தி முடித்தார்.

உலவாக்கிழி வைக்கப்பட்ட பலிபீடம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. நந்திக்கு பின்புறமாக உள்ள பீடமே பலிபீடம் ஆகும். அப்பீடத்தினைச் சுற்றி பூதகணங்களின் உருவங்கள் உள்ளன. இங்கு நின்று இறைவனை வேண்டினால் வாழ்வில் பொன்னும், பொருளும் குறைவின்றி வந்து சேரும். இத்தலத்து உற்சவரின் பெயர் அனைத்திருந்த நாயகர். இறைவன் இறைவியை தழுவிக் கொண்ட வடிவம்.

இத்தலம் ஆண், பெண் ஒற்றுமையை தரக்கூடியது. பிரிந்த தம்பதிகள் இத்தலத்து இறைவனையும், இறைவியையும் வழிபடில் பிரிந்தவர் ஒன்று கூடுவர் என்பது திண்ணம். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கிறது. இத்தலத்து இறைவன் முசுகுந்த சக்கரவர்த்திக்கு பிள்ளைப்பேறு அளித்தவர் ஆவார். இத்தலத்து இறைவனை முறையாக வழிபடில் பிள்ளைப்பேறு நிச்சயம். இத்தலம் திருமணத்தடை நீக்கும் தலமும் ஆகும்.

இத்தலத்தில் சித்தர் திருமூலர் பெருமான் சமாதி அடைந்துள்ளார். இத்தலத்தின் தொன்மைப் பெயர் நவகோடி சித்தர்புரம் என்பது கவனிக்கத்தக்கது. சித்தர்கள் வழிபட்ட இறைவன் நம் வாழ்வில் ஒளியேற்றுவார் என்பது திண்ணம்.

நாமும் தினமும் இப்பதிகத்தை பாடி எல்லா வளங்களையும் பெறுவோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!

ஓம் சிவ சிவ ஓம்

Tuesday, September 24, 2013

கனகதாரா ஸ்தோத்திரம்




                                                          ஆதிசங்கரர் அருளியது


அங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாய:

அங்கம் புளகமுற ஹரிமேனி தன்னை
அனுபவித்து அணி செய்நின்,ஒளிநிறைந்த,பார்வை
துங்கமுறும்,தம்மால,முகை தமையே,சார்ந்து
சுடரும்பெண் வண்டுகள் தாம் சூழ்ந்திருப்ப தொக்கும்
மங்களம்சேர் மகாலட்சுமி அனைத்து நல மெல்லாம்
வழங்கு திறல் நின் கண்படைத்து விளங்கு கின்றதம்மா
பொங்கு நலன் அத்தனையும் பொழிவது வேயாகப்
பொருந்துக நின் பார்வையது என்மீது தாயே

முக்தாமுஹுர்விதததி வதநே முராரே:
பிரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி
மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:

நீலோத்பல மலருள் போய்வந்து மீண்டும்
நிறைகாணா தவிக்கின்ற பெண் வண்டைப் போல
மாலின்முக மண்டலத்தே நோக்கும் நின் விழிகள்
மயங்குவதும் ரசிப்பதுவும் ஆசை வெட்கம் துள்ள
பாலித்துத் தியங்குவதாய் பார்வையது கொண்டாய்
பாற்கடலின் திருமகளே நினது கடைப் பார்வை
சால்புடைய என்மீது தவழவிட வேண்டும்
சகல நலன் அப்பார்வை தந்துவிடும் தாயே

ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆநந்தகந்தமநிமேஷமநங்க தந்த்ரம்
ஆகேகரச்திதகநீநிகபக்ஷ?மநேத்ரம்
பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:

அரிதுயிலும் முகுந்தனையே இமையால் நோக்கி
ஆனந்தப் பெருமிதப்பில் ஆழ்த்துகின்றாய் தாயே
வரிகாமன் வசம்பட்டு நின்கரு விழிகள் இரண்டும்
வட்டாடி நிலை புரண்டு இமையோடு சேர்ந்து
புரிசெவியின் அருகுவரை போய்வந்து மீண்டு
பூரித்து நீண்டு விட்டதென விளங்கும்
விரிவிழியின் கருணை நிறை ஒளி நிறைந்த பார்வை
வீழ்ந்தென்மேல் இன்பத்தில் ஆழ்த்துக என்னாளும்

பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா:

திருமாலின் திருமார்பில் திகழ் துளபமாலை
தேவி நீ நோக்க இந்திர நீலமதாய் மாறும்
பெருமானின் விருப்பமதை நிறைவேற்றும் வலிமை
பெற்றுத் திகழ்கின்றது நின் ஒளி நிறைந்த பார்வை
திருமகளே கடைக் கண்ணால் எனை நோக்கு வாயேல்
திருவுடனே மங்கலங்கள் எனைச் சரணம் செய்யும்
பெருமனது கொண்டு கடைக்கண் அதனால் நோக்காய்
பேரின்பச் சுகமெல்லாம் எனைச் சாரட்டும் தாயே

காலாம்புதாலி லலிதொரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ
மாது ஸமஸ்தஜகதாம் மஹநீயமூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்க்கவ நந்தநாயா:

நீருண்ட மேகமெனத் திகழும் திருமாலின்
நெடிய திருமார்பதனில் கொடி மின்னலென்ன
சீருடனே விளங்கும் நின் திருவுருவம் தாயே
செய்தவத்தால் பிருகுமுனி நினைமகளாய்ப் பெற்றான்
பாருலக மெலாம் நின்னைத் தாயெனவே வாழ்த்தி
பக்தியுடன் தொழுகின்றார் நினது திருவுருவை
சார்ந்திட்டேன் நின்னடியைச் சகல நலமருள்
தாயே என்மீது கடைக் கண் வைப்பாய் நீயே

ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதிநி மந்மதேந
மய்யாபதேத் ததிஹ மந்த்ரமீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ஸ மகராலய கந்யகாயா:

மங்களங்கள் அத்தனையும் தங்குமிடம் எதுவோ
மாலுக்கே வலிமைதரும் பார்வையது எதுவோ
சிங்கநிகர் மதுவென்னும் தீயவனைச் செருக்கத்
திறம்படைத்த திருமாலின் சௌலப்யம் எதுவோ
பொங்குமதன் மாலிடமே புகுந்ததுறை எதுவோ
பேரலை கொட்டும் சாகரத்தின் தவமகளே நின்றன்
தங்குமுக மண்டலத்தில் தவழும் திருப்பார்வை
தமியேன் என்மீது சிறுதுளி படட்டு மம்மா

விஷ்வாமரேந்த்ரபத விப்ரமதாநதக்ஷம்
ஆநந்தஹேதுரதிகம் முரவித்வி÷ஷா(அ)பி
ஈஷந்நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்த
மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா:

விளையாட்டாய் நின்பார்வை எவர்மீது படினும்
வியனுலக இன்ப நுகர் அமரேந்திரனு மாவான்
முளைமுரன் தனைசெகுத்த முகுந்தனும் நின்பார்வை
முழுவிழியின் திருஷ்டியினால் ஆனந்தத் துயிலாழ்ந்தான்
துளக்கமுறு நீலோத்பல மலர் மகுடம் போன்று
தூயநின் திருமுகத்தில் தோன்றும் கடைப் பார்வை
விளக்கமதாய் அரைப் பார்வை க்ஷண நேரமேனும்
வீழட்டும் என்மீது கருணை நிறை தாயே

இஷ்டாவிஷிஷ்டமதயோபி யாயா தயார்த்த
ஸ்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் சுலபம் லபந்தே
திருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:

அஸ்வமேத யாகம் செய்தும் அகலாத பாபம்
அத்தனையும் அழிய மனச் சுத்திசெய்வ தெதுவோ!
இச்சகத்தில் எவர் தயவால் இந்திரனார் பதமும்
இனை சுகமும் சுலபத்தில் பெறுவதெவர் அருளோ
உச்சிட்ட தாமரையின் நடுப்பாகம் ஒப்ப
ஒளிர்கின்ற திருமகளே நின் கருணை நிறை பார்வை
விச்சையுள்ள யெளியேனின் விருப்பமெலாம் நல்க
வியன் கருணையென என்மேல் பொழிந்திடுவாய் தாயே

தத்யாத் தயாநுவபநோ த்ரவிணாம்பு தாரா
மஸ்மிந்நகிஞ்சந விஹங்கஸிஸௌ விஷண்ணே
துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்
நாராயண ப்ரணயிநி நயநாம்புவாஹ:

சாதகப் புள்ளென நாளெல்லாம் தவித்தேன்
தரித்திரம் விஞ்சவே வாடினேன் பலநாள்
பாதகம் தாபம் தரித்திரம் துக்கமெல்லாமும்
பற்றிய எனைவிட்டு வெகுதூரமே ஓட
ஆதரவாம் கருணைக் காற்றினால் அசைய
அருள்பொழி மேகமாய் நின்கண்களெ விளங்கி
போதனை போல் பொன்மலை என்மீது நீ
பொழிந்திடு தாயே நின் கருணையாம் விழியால்

கீர்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ்தருண்யை

சிருஷ்டியிலே கலைமகளாய்த் திகழ்கின்றாய் தாயே
சீவர்களைக் காப்பதற்குத் திருமகளே யாவாய்
மருட்டுகின்ற அரக்கர்களை அழிக்கின்ற போது
மகா துர்க்காயென விளங்கும் வல்லபையும் நீயே
பெருகு பிறைச் சந்திரனைச் சூடுகின்ற பெம்மான்
பிரியபத்தினி பார்வதியாய் விளங்குபவள் நீயே
குரு விஷ்ணு பத்தினியே மூவுலக மெல்லாம்
கொண்டாடும் மகாலட்சுமி திருவடிக்கே சரணம்

ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸுத்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து சதபத்ரநிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புரு÷ஷாத்தம வல்லபாயை

வேதப்பிரம சொரூபமாக விளங்கும் தாயே சரணம்
விணையின் பயனை பகிர்ந்தளிக்கும் ஆதித்தாயே சரணம்
சோதி அழகுவடிவாம் ரதியே சுடரே தாயே சரணம்
தூயமங்கள குணங்கள் அமைந்த கருணைத் தாயே சரணம்
இதயத் தாமரை இருப்பிடமாக ஏற்கும் தாயே சரணம்
இதயசுத்தி வடிவாய்த் திகழும் சக்தித்தாயே சரணம்
உத்தமோ உத்தமன் பத்னியான லட்சுமித்தாயே சரணம்
உயர்ந்த பூரண சொரூபியான புஷ்டித் தாயே சரணம்

நமோஸ்து நாளீகநிபாநநாயை
நமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை

பங்கயத்தை யொத்த திருமுக முடையாய் சரணம்
பாற்கடலில் உதித்த திரு லட்சுமியே சரணம்
மங்களம் சேர்மதி அமுதம் உடன்பிறப்பாய் பெற்றாய்
மகிமை மிக்க நாராயணன் மனையரசி லட்சுமி சரணம்

நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டலநாயிகாயை
நமோஸ்து தேவாதிதயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை

தங்கத் தாமரை தன்னில் அமர்ந்த தாயே லட்சுமி சரணம்
தரணிக் கெல்லாம் தலைவியான தாயே திருவே சரணம்
மங்கள தயவே தேவர்க்கருளும் மகாலட்சுமி சரணம்
மகிமை மிக்க சாரங்கபாணி மனையரசி லட்சுமி சரணம்

நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தநாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்தியயை
நமோஸ்து லக்ஷ?ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதரவல்லபாயை

மகரிஷி ப்ருகு முனியின் திருமகளே சரணம் சரணம்
மகாவிஷ்ணு மார்பில் திகழும் மகாலட்சுமி சரணம்
தங்க ஆசனம் தாமரை மீதில் தங்கும் தாயே சரணம்
தாமோதரனின் தர்மபத்னி லட்சுமித் தாயே சரணம்

நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவநப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதிபி ரர்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை

சோதிவடிவே கமல நயனம் துலங்கும் தாயே சரணம்
செல்வம் சிருஷ்டி தலைவியான திருவே தாயே சரணம்
ஆதிதேவர் அனையர் போற்றும் அன்னை லட்சுமி சரணம்
ஆயர்நந்த குமரன் துணைவி அருளும் லட்சுமி சரணம்

சம்பத்கராணி சகலேந்த்ரிய நந்தநாதி
சாம்ராஜ்யதாநவிபவாநி ஸரோருஹாக்ஷ?
த்வத்வந்தநாதி துரிதாஹரணோத்யதாநி
மாமேவ மாதரநிஸம் கலயந்து மாந்யே

தாமரைக் கண்கள் படைத்த தாயே சௌபாக்ய நல்கும் தேவி
சகல மாந்தர் போற்றும் தாயே சாம்ராஜ்யம் நல்கும் தேவி
நேம புலன்கள் ஆனந்தம் பெறவே நெடிய பாபம் தீர்ப்பாய்
நிந்தன் திருவடி துதிக்கும் பாக்யம் நீயே எனக்குத் தருவாய்

யத்கடாக்ஷஸமுபாஸநாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:
ஸந்தநோதி வசநாங்க மாநஸை:
த்வாம் முராரிஹ்ருதயேஸ்வரீம் பஜே

கடைக்கண் பார்வை வேண்டியே நாளும் கைதொழுது பூசனை
புரிவோர்க்கு தமக்கு தடையிலாச் செல்வம் தருபவள் எவளோ
தயையே மிக்க தயாபரி எவளோ மடை திறந்தென்ன நல்வரங்கள்
நல்கும் மாயன் முராரியின் இதயத் தலைவி அடைந் திடற்கரிய
அன்னைநின் திருவடி அடைக்கலம் அம்மா அடக்கலம் போற்றி

ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
தவள தமாம்ஸுக கந்தமால்யஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோக்ஞே
த்ரிபுவநபூதிகரி ப்ரஸீத மஹ்யம்

கமல வாசினி கரக் கமலம் உடையாய் களப சந்தன மாலையும்
தரித்து நிமலவெண் துகில் மேனியில் தவள நிர்மல ஜோதியாய்
திகழ்பவள் நீயே அமல முகுந்தன் இன்னுயிர்த் தலைவி அலகில்
கீர்த்திகொள் மனங்கவர் செல்வி விமலையே நலன்கள்
எங்களுக் கருள்வாய் வேண்டினேன் தாயே அருள்புரி நீயே

திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹிநீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ
லோகாதிநாத க்ருஹிணீ மம்ருதாதிபுத்ரீம்

தெய்வக் கங்கை நன்னீர் எடுத்து திசையானைகள் தங்கக்
குடத்தில் ஏந்திஉய்ய நீராட்டும் உடலே உடையாய் உலகத்
தாயே உலகைப் புரக்கும் தெய்வத் திருமால் மார்பில் திகழும்
திருவே பாற்கடல் தோன்றிய செல்வி மெய்யாம் நின்றன்
திருவடிச் சார்ந்தே வைகறை தொழுதேன் வாழ்வளிப் பாயே

கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
கருணாபுர தரங்கிதைரபாங்கை:
அவலோகய மாமகிஞ்சநாநாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:

கமலிநீயே கமலக் கண்ணன் காதலீ கருணை வெள்ளமே
பொழிந்திடும் திருவே கமலக் கண் பார்வைக் கேங்கி
இளைத்துக் கதறும் என்றன் துதியினைக் கேட்டு தமியேன்
நின்றன் தயையினுக் கேங்கும் தரித்திரன் தக்கான்
எனநீ கனிந்து சமயமறிந்து என்றனுக் கருள நின் தவளும்
கடைக்கண் வைப்பாய் என்மீதே

ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரந்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவநமாதரம் ரமாம்
குணாதிகா குருதரபாக்யபாகிந:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா:

மறைகள் மூன்றின் வடிவாய்த் திகழும் வையகம் மூன்றுமே தொழுதிட
நின்றாய் முறையாய் இந்தத் தோத்திரம் தன்னைநின் முன்றில்
துதித்துப் போற்றுவோர் தமக்கு நிறைசெல்வம் கீர்த்தி, கல்வி
ஆரோக்யம் நிறைஆயுள் புத்தி சக்தியும் தந்து துறையெனப்
புலவோர் போற்றிடச் செய்யும் துணிவும் சக்தியும் தருவாய் தாயே

(ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகத்தை தினமும்அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் படித்து மகாலட்சுமியை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்)



பொன் பொழிகள்

1. மனிதன் எவன்? அவன் எதனால் ஆக்கப்படுகிறான்? மனிதன் எண்ணம். அவன் எண்ணத்தால் ஆக்கப்படுகிறான்.

2. மாறுதல்கள் எல்லாம் இயல்பானவை. நீங்கள் ரயிலில் பிரயாணம் செய்யும் போது, காட்சிகள் மாறாவிட்டால் ரயில் நின்று விட்டிருப்பதைக் காண்பீர்கள். மாறுதல் இன்றேல் வாழ்க்கை இல்லை.

3. சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். அது இதயத்தின் இசை.
சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். அது இளமையின் ரகசியம்
படிக்க நேரம் ஒதுக்குங்கள். அது மகிழ்ச்சிக்கு வழி.
உழைக்க நேரம் ஒதுக்குங்கள். அது வெற்றியின் விலை.

4. காசையோ, நோட்டையோ எண்ணிக்கொடுக்கும் போது ஞாபகமாக வாழ்த்திக் கொடுங்கள். அதனிடம் அதனிடம் சொல்லுங்கள். " செல்வமே! யார் உன்னைத் தொட்டாலும் அவர்களுக்கு நன்மை செய்வாயாக. போய், பசித்தவர்களின் பசியைத் தணித்து, துணியில்லாதவர்களுக்கு ஆடை அணிவித்து, பன்மடங்காகப் பல்கிப் பெருகி என்னிடம் திரும்பி வருவாயாக!
                                                                                                                                                                      5. ஒரு சிறிய இன்பத்தைத் துறப்பதன் மூலம் ஒரு பெரிய இன்பத்தை அடைய முடியுமெனின், பெரியதற்காகச் சிறியதை விட்டுக் கொடுப்பவன் அறிவாளி

6. நம் அன்றாட வாழ்க்கையில் கழியும் ஒவ்வொரு கணத்திலும் பெரிய பொருள் பொதிந்திருக்கிறது. இது ஆண்டவனுடையது என்ற உணர்ச்சியுடன் ஒரு சாதாரணக் காரியம் செய்தபோதிலும் அது புனிதமாகி விடுகிறது.

7. முதியவர் ஒருவருக்கு அளிக்கப்படும் கௌரவம், கடவுளுக்குச் செய்யப்படும் மரியாதையாகும். அப்படிக் கண்ணியமளிக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் அவர்களது வயோதிகப் பருவத்தில் மரியாதை செய்பவர்களைக் கடவுள் நியமிக்கிறார்.

8. உலகத்திலேயே மிகப் பெரிய மனிதன் யார்? ஒரு வேர்க்கடலையைச் சாப்பிட்டு விட்டு அத்துடன் நிறுத்திக் கொள்ளும் மனோபலம் உள்ளவன்.

9. சரீரத்தால் மற்றவர்களுக்குக் கைங்கர்யம் செய்வது பெரிய புண்ணியம். ஒவ்வொருத்தரும் பிறருக்குக் கூடத் தெரிய வேண்டாம்; ஏதோ ஓர் ஒற்றையடிப் பாதைக்குப் போய் அங்கேயுள்ள முள்ளை, கண்ணாடியை அப்புறப்படுத்தி வந்தால் போதும், அது சித்த சுத்திக்குப் பெரிய உதவி.

10. உற்சாகமாக இருப்பதற்கு ராஜபாட்டை என்ன? நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு ஏற்கெனவே உற்சாகமாக இருப்பது போல் பாவனை செய்து கொண்டு உற்சாகத்துடன் பேசி , உற்சாகமாகப் பழகுவதுதான்.

கர்ம வினைகளை அழித்து - ஆரோக்கியம், மன நிம்மதி , செல்வ வளம் பெற - மகாளய பட்ச வழிபாட்டு முறைகள்

புரட்டாசி அமாவாசைக்கு முன் பதினான்கு நாட்களாக விரதம் இருந்து அமாவாசை அன்று நம் மூதாதயருக்கு தரும் தர்ப்பணம் நம் குலத் தோன்றல்களுக்கும் எதிர்வரும் சந்ததியர்களுக்கும் செல்வச் செழிப்பையும் நற்பண் புகளையும் தரவல்லது. மகாள பட்ச காலத்தில் நமது பித்ருக்கள் (மூதாதையர்கள்) தங்க ரதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்களின் வழியாக பித்ரு தேவதைகளின் அனுமதியுடன் பூலோகத்தில் உள்ள தத்தமது சந்ததியர்களை காணவருகின்றார்கள்.

இவ்வாறு அவர்கள் வரும் இக் காலம் மகாளய பட்ச காலமாக போற்றப்படுகின்றது. (மகா+ஆலயம்=மகாளயம்). எனவே தினம் தினம் ஆலயம் சென்று இறைவனை வழிபட முடியாதவர்களும் இதுவரை பித்ரு பூஜை செய்யாதவர்களும் கூட இந்த மகாளய காலத்தில் பித்ருக்களை நினைத்து வீட்டில் காலம் சென்ற மூதாதயரின் ஒருவரது படமேயாயினும் இருக்குமானால் அதன் முன் இக் காலத்தில் தினம் தினம் ஏதாவது ஒரு சாதம் செய்து படையல் இட்டு வழிபாடு செய்யலாம்.

அல்லது பழவர்க்கங்களில் ஏதாவது ஒன்றினை தினம் படைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தரலாம். பிடித்த பலகாரங்களை செய்து அவர்களுக்கு படைத்து எள் எண்ணெய் தீபம் தனியாக போட்டு வழிபாடு செய்ய வேண்டும். நம் முன்னோர்களை நினைத்து வயதானவர் களுக்கும் ஏழை முதியோர்களுக்கும் உணவு அளித்து அவர்களுக்கு துணிமணி தானம் தந்தால் நம் முன்னோர்கள் அதனைக் கண்டு மகிழ்ந்து நம் குலத்தவர்களை வாழ்த்துகின்றனர்.
மூதாதயரை நினைத்து காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில் அல்லது தென் கிழக்கு பாகத்தில் சாதம் வைத்து வழிபட்டால் மிக நன்மைகள் கிடைக்கும். மகாளய பட்ச அமாவாசை வரும் 4-ந்தேதியாகும். அன்று காலையில் எழுந்து குளித்து விட்டு ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரைகளில் அல்லது வீட்டின் வடகிழக்கு கிணற்றின் அருகில் மூதாதயர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால், "என்றோ ஒரு பாட்டன் மூலம் இன்று வரை நம்குலம்'' என்ற நிலையில் இருந்த நாம் இனி வரும் காலங்களில் நாம் பாட்டன்களாகவே இருக்கும் நிலையும் சந்ததியர்களின் வளர்ச்சியும் இருக்கும்.

கடவுளுக்கு நாம் செய்யும் பூஜையில் பத்தாயிரத்தில் ஒரு பங்கினைத்தான் நாம் நமது முன்னோர்களுக்கு செய்கின்றோம். கடவுளையே நமக்கு அடையாளம் காட்டிய அந்த அன்பு ஜீவிகள் நாம் செய்யும் பூஜையில் மகிழ்ச்சி அடைந்து நம்மை வாழ்த்துவதில் தெய்வத்திற்கு நிகரான வரம் தருகின்றார்கள். நாம் கடவுளிடம் செலுத்தும் அன்பைப் போல் நமது முன்னோர்களிடமும் செலுத்தினால் கை மேல் பலன் கிட்டும்.

`நமது முன்னோர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். பூமியில் வாழ்ந்து மடியும் நம் மூதாதையர்களின் பூத உடல் தான் மறைகிறது. ஆனால் ஆன்மாவானது தனது சூட்சும உருவில் இருந்து அருளாசி வழங்கி தன் குலத்தை காத்து வருகின்றார்கள். எனவே பித்ரு பூஜை நமது முன்னோர்களால் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டு வந்துள்ளது. நாமும் நமது மூதாதயரை எண்ணி பித்ரு பூஜையை செய்வதன் மூலம் மூதாதயரின் ஆசியோடு ஆனந்த வாழ்வு அடைவோம் .

நோயில் இருந்து விடுதலை:

பணம் உள்ளவர்கள் தான் ஆடம்பரத்துக்காக பூஜை செய்கின்றனர். நமக்கு ஏன் இந்த வேலை என யாரும் புறக்கணிக்க வேண்டாம். முடிந்த அளவு இந்த அமாவாசையில் நீங்கள் உங்கள் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய்களில் இருந்து விடுவிக்கும்.

பிதுர் தேவதைகள்:

நாம் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யும் போது ஐந்து பிதுர் தேவதைகளை வரவேற்கின்றோம்.

1. நம் பித்ருக்கள் (மண்),
2. புரூரவர் (நீர்),
3. விசுவதேவர் (நெருப்பு),
4. அஸீருத்வர் (காற்று),
5. ஆதித்யர் (ஆகாயம்)

என பஞ்ச பூத அம்ஸமாக ஐவரும் ஒரு சேர பூமிக்கு வருவது மகாளய பட்சத்தில் தான் என கருட புராணம் விளக்கமாக கூறுகின்று. திரேதா யுகத்திலும், கிருதாயுகத்திலும் மகாளய பட்ச நாட்களில் மூதாதையர்கள் நேரில் தரிசனம் தந்து உணவு பெற்று வாழ்த்தி சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.

ஸ்ரீராமர் தன் தந்தையான தசரதனுக்கும், கிருஷ்ணன் தன் மூதாதயர் அனைவருக்கும் இவ்வாறு தர்பணம் செய்ததாக நமது இதி காசங்கள் கூறுகின்றன. ஆனால் இëக்காலத்திலோ சூரியனின் ஒளியை விட அதிக பிரகாசமாக உலாவரும் அவர்களை நம் கண்களால் காண இயலாத நிலையில் நமது வாழ்வியல் தன்மை அமைந்துள்ளதால் மானசீகமாக பூஜை செய்து, நாம் தரும் திதி நமது முன்னோர்களை மகிழ்விக்கின்றது.

இவ்அமாவாசையில் பால், தயிர், நெய், தேன், பழவர்க்கங்களை நிவேதனமாக வைக்கலாம். பலகாரம், சாதவகைகளையும் படையல் செய்யலாம். வசதி குறைந்துள்ளவர்கள் மூதாதயரை மனதில் நினைத்து அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு உணவாகத் தந்தாலே போதும் முதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதர வற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளியுங்கள். வருங்காலத்தில் நீங்கள் வெற்றியாளர்களே!

புனித நீர் ஸ்தலங்கள்:

காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஷரோவர், சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோவரணம் போன்ற இடங்கள் திதி தர ஏற்ற இடங்கள். நம் தமிழகத்தில் ராமேஸ்வரம், பவானி கூடுதுரை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு, உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் ஆலயம், மற்றும் ஆற்றங்கரைகளிலும் பித்ருக்களுக்காக நாம் பின்டம் பிடித்து தர்ப்பனம் செய்வது கூடுதல் பலன் தரவல்லது.

காருண்ய பித்ருக்கள்:

சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், இப்பூவுலகில் சாஸ்திர உணர்வு பெற, வாழ்வியல் தெளிவு பெற நமக்கு உதவிய அத்துனை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.

இவர்கள் "காருண்ய பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்''. எனவே மறைந்த நண்பர்கள், தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை அன்று குறைந்தது ஒரு ஜோடி ஆண்-பெண் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நீங்கள் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவுங்கள் உங்கள் வாழ்வும், வம்சமும் சிறக்கும்.

பலன்கள்:
நீண்ட நாள் கடனாளியா நீங்கள்? இப் பூஜையால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும். நோய் நொடிகள் அகலும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும். யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும். உத்தி யோகம் கிடைக்கும். உத்யோக உயர்வுகள் உண்டாகும். தடையாக இருந்த திருமண வாழ்வு சுகமாக தொடரும். திருமணத் தடை அகலும்.

இல்லறம் இனிக்கும் குழந்தைகள் கல்வியில் உயர்வு பெறுவர். வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். குழந்தை பாக்யம் கிட்டும், வியாபார அபிவிருத்தி உண்டாகும். குடும்ப சாபம் அகலும், செவ்வினைகள் அன்டாது. கால்நடை பெருக்கம், விவசாய அபிவிருத்தி ஏற்படும்.

சீரான மழை கிடைக்கும். அரசு பதவி கிடைக்கும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். புகழ் பரவும். புன்னகை தங்கும், பொன்நகை அதிகரித்து கிடைக்கும், குடும்ப ஒற்றுமையாக செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். நிம்மதி நிலைக்கும்!

இந்த பொன்னான வாய்ப்பை நம் வாசகர்கள் பயன் படுத்திக் கொள்வது , கிரகங்களின் மூலம் ஏற்படும் அத்துணை இடர்களிலிருந்தும் - உங்களை பாதுகாத்தது உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் நன்மை பயக்கும்..!

Friday, September 20, 2013

பித்ருக்களுக்கு திதி கொடுப்பது எதற்காக!

click this link below
http://www.youtube.com/watch?v=6oKl-Z2ZKDo

பிரதோஷ வழிபாட்டின் சிறப்புகள் என்ன?


பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம்.

எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

அதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.

நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.

மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.

எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.

எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும்காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.


வீட்டில் சுவாமி படங்களை கும்பிடுவதற்கும், கோயிலில் வழிபாடுவதற்கும் என்ன வித்தியாசம்?


நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சனநீர், பூசை கொள்ள வாராய் பராபரமே என்று தாயுமானவர் பாடியுள்ளார்.

எனது இதயமே கோயில், உன்னைப் (இறைவன்) பற்றிய நினைவுகளே மலர்கள், உன் மீதான அன்பே மஞ்சனநீர் (அபிஷேகத்திற்கான பால், தேன்). எனவே, இதுபோன்ற பூஜையே என்னால் செய்ய முடியும்; உடனே வருவாய் என் இறைவா என்பதே இப்பாடலுக்கு அர்த்தம்.

உட்கார்ந்த இடத்தில் இருந்தே இறைவனை அழைக்கும் அளவுக்கு ஆத்ம பலம் சித்தர்களுக்கு இருந்தது. ஆனால் இதுபோன்ற பலம் மனிதர்களுக்கு இருப்பதில்லை.

பொதுவாக கோயில் என்பது ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட இடம். அதற்கென்று தனி சக்தி உள்ளது. அதே போல் வீடு என்று எடுத்துக் கொண்டால், அதில் அமைக்கப்படும் பூஜையறை மிகவும் சிறிதாகவே இருக்கும். ஆனால் பெரும்பாலான கோயில்களின் கருவறை வீட்டு பூஜை அறையை விடப் பெரிதாக இருக்கும்.

கோயில்களில் உற்சவ மூர்த்திகள், மூலவர், அவதாரங்கள் இருப்பதுடன், அவற்றுக்கு நாள்தோறும் கால பூஜைகள் நடத்தப்படுகின்றன. வாத்தியங்கள் முழங்க இறைவனை ஆராதிக்கின்றனர். ஏக முகம், பஞ்ச முகம், சிங்க, கஜ முக தூப தீப ஆராதனைகள் நடத்தப்படும். இதன் காரணமாக கோயில் வழிபாட்டால் ஆக்ரஷ்ண சக்தியைப் பெற முடிகிறது.

ஆனால் வீட்டில் உள்ள பூஜையறையில் விளக்கு வைத்து, நமக்கு தெரிந்து ஸ்லோகங்களைச் மட்டும் சொல்லி, கற்பூரம் ஏற்றி இறைவனின் உருவப்படத்திற்கு வழிபாடு செய்கிறோம். இதனால் கோயிலில் கிடைக்கும் சக்திக்கு இணையான சக்தி வீட்டில் வழிபடுவதால் கிடைப்பதில்லை.

பொதுவாக, கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு வீட்டிற்கு திரும்பியதும் பூஜையறையில் இறைவனை வழிபட்டால் நமக்கு கிடைத்த ஆக்ரஷ்ண சக்தி வீடு முழுவதும் பரவும்.

அதுமட்டுமின்றி, சிறப்பு வாய்ந்த கோயில்களுக்கு ஆழ்வார்கள், நாயன்மார்கள், மகான்கள், மன்னர்கள் ஆகியோர் வந்து சென்றதாக வரலாறு கூறுகிறது. அவர்களின் பாதம் பட்டதால் கோயில்களும் புனிதமடைகின்றன. ஆனால் வீட்டின் பூஜையறையில் இவர்கள் பாதம் படுவதற்கான சாத்தியங்கள் இல்லை.

எனவே வீட்டுப் பூஜையறையில் வழிபடுவதை விட, ஆலயங்களில் வழிபாடு செய்வதே அனைத்து வகையிலும் சிறப்பு வாய்ந்தது.




வருமானம் தரும் வடக்கு ஜன்னல்



ஒரு வீட்டின் வடக்குத் திசையில் உச்ச பாகத்தில் வைக்கப்படும் ஜன்னலையே வடக்கு ஜன்னல் என்று குறிப்பிடுகிறோம்.

வடக்குப் பக்கம் குறைந்தபட்சம் இரண்டு அடிகள் காலியிடம் விடப்பட்டு காம்பவுண்டும் கட்டப்பட்டு இருக்கும் வீடுகளில் உள்ள வடக்கு ஜன்னல் பூரண சிறப்பைத் தருகிறது.

வடக்குத் திசையின் அதிபதியாக குபேரனைக் குறிப்பிடுகிறோம். குபேரன் எனப்து ஒரு குறியீடு. குபேரனுக்கு அதிதேவதை சோமன். குபேர கடாட்சம் விரும்புகிறவர்கள் வடக்கு ஜன்னலையும் அதன் வழியாக வரும் காற்றையும் விரும்புகிறவர்களாக இருப்பார்கள்.

குபேரனிடம் மஹாபத்மம், பத்மம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலாகர்வம் எனும் ஒன்பது வித நிதிக் குவியல்கள் இருக்கின்றன என பழம்பெரும் நூல்கள் கூறுகின்றன. இவைகளில் சங்கமும், பத்மமும்தான் முதல்நிலை தகுதியைப் பெறும் நிதிகள். இவைகளுக்கு உருவம் உண்டு.

குட்டையான பூதவடிவில் தாமரை மலர் மீது சங்கை வலது கரத்தில் பிடித்திருப்பவர் சங்கநிதி. வலது கையில் தாமரையைப் பிடித்திருப்பவர் பத்மநிதி. நமது கோவில் நுழைவாயில்களில் இடப்புறம் பத்மநிதியையும், வலப்புறத்தில் சங்க நிதியையும் காணலாம். தஞ்சை பெரிய கோவிலில் நுழைவாயிலின் இருபுறமும் இடம் பெற்றிருக்கும் இக்கோடீசுவர பூதங்களை பக்தர்கள் கவனித்திருக்கக் கூடும்.

தமிழகத்தின் புகழ்பெற்ற கோயில் கோபுரங்களில் ஈசானிய மூலையிலிருந்து வாயு மூலைக்குள் வருகிற பகுதியில் தான் குபேரனின் சிற்பங்கள் இடம் பெறுவது வழக்கம்.

நமது வீடுகளில் கூட இந்தக் குபேரனை தரிசனம் செய்வதற்காகத்தான் நமது பணப்பெட்டிகள் நைருதி மூலையில் வடக்கைப் பார்த்தவாறு வைக்கப்படுகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

வடக்கு என்பது மேலே, தெற்கு என்பது கீழே.

ஒரு ஆரஞ்சுப் பழத்தின் மீது சொருகப்பட்ட குண்டுசீயைப்போல நாம் பூமி மீது நின்று கொண்டிருக்கிறோம். ஆரஞ்சின் மேல்புறம் வடதுருவம், அடிப்புறம் தென் துருவம் என்று கற்பனை செய்துகொள்ள வேண்டும்.

வடக்குத் திசை நமது இடது தோளைக் குறிக்கிறது. வலக்கையை தலைக்கு வைத்து ஒருக்களித்துப் படுத்திருப்பவரின் இடது தோளில் யாராவது ஏறி உட்கார்ந்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அவரால் நிம்மதியாக தூங்க முடியுமா? தூங்கி எழுந்து கடமைகளை செவ்வனே ஆற்ற முடியுமா? நாம் வசிக்கும் வீடும் நம்மைப் போன்றதுதான். அவ்வீட்டின் இடப்புறமான வடபாகத்தில் பொதுச்சுவர் இருக்கக்கூடாது. இருந்தால் தோளின் மீது பாரம் ஏற்றிய மாதிரி பக்கத்து வீட்டை நமது வீடு சுமந்து கொண்டிருப்பதாக அர்த்தம்.

இது கிழக்கு, மேற்கு, தெற்கு என எல்லா திசை வீடுகளுக்கும் பொருந்தும்.

ஒரு வீட்டின் வாயில்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். சாலைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். திசைகள் நிலையானவை என்பதால், ஒரு வீட்டின் வடக்குத் திசையில், சூரிய வெளிச்சம் நிலத்தில் படுமாறு திறந்தவெளியாக இருப்பது மிக மிக அவசியம். வடக்குச் சுவற்றில் ஒரு ஜன்னலேனும் இருந்து அதை பகலில் திறந்து வைப்பது அதைவிட அவசியம்.

இது குடும்பத் தலைவரின் வருமானத்தை சீராக வைத்திருக்கும் என்பது அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை.

நாய் வளர்ப்பும் வாஸ்து பரிகாரமும்

ஆதிகாலம் முதற்கொண்டு மனிதனின் நெருங்கிய வளர்ப்புப் பிராணியாக இருப்பவை நாய்கள்.

வேட்டைக்குச் செல்லும் பொழுதும் ஆடு மாடுகளை மேய்குகம் பொழுதும் உரிய தோழனாகத் திகழ்பவை நாய்களே.

இன்றைக்கும் பல வீடுகளில் பணக்கார வீடாக இருந்தாலும் சரி, ஏழை வீடாக இருந்தாலும் சரி நாய்களுக்குத் தரும் முக்கியத்துவம் நம்மை ஆச்சரியப்பட வைக்கும்.

எப்பொழுதும் மனிதனை அண்டியே வாழும், அவனது அன்புக்காக ஏங்கும் நாய்களால் வாஸ்து பரிகாரம் கிடைக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

நம்பித்தான் ஆக வேண்டும் எனது அனுபவங்கள் இந்த நம்பிக்கையை மேலும் மேலும் உறுதிப்படுத்துகின்றன.

ஆண் வீடு அல்லது பெண் வீடு என்பதை ஈசானிய வளர்ச்சி அல்லது தளர்ச்சி கொண்டு முடிவு செய்கிறோம் அல்லவா? அதேபோல் சில வீடுகளில் ஆண் அப்பெண் நாய்களை எடுத்து வளர்க்கும் பொழுது வீட்டு உரிமையாளரின் கஷ்டங்கள் தற்காலிகமாக கட்டுக்குள் அடங்கியிருக்கிறது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போவது போல சிறிய பிரச்சனைகள் மிகப்பெரிய பிரச்சனையாக மாறாமல் தடுத்து நிறுத்தப்படுகிறது.

யார் யார் பெண் நாய் வளர்க்கலாம்?

என்னுடைய வீட்டில் வடக்கும் கிழக்கும் மூடி இருக்கிறது. வடக்குப் பக்கமோ கிழக்குப் பக்கமோ ஒரு சன்னல் வைக்கக்கூட வழியில்லை என்பவர்கள் ஒரு பெண் நாய்க் குட்டியை எடுத்து வளர்க்கலாம்.

கிழக்குச் சுவர் மூடப்பட்டிருக்கிறது, ஆனால் வடக்கு வடக்கு வாசல் உள்ளது. வடக்கில் திறந்தவெளி உள்ளது. இதுபோன்ற அமைப்பு உள்ளவர்களுக்கும் பெண் நாயே ஏற்றது.

வீட்டு ஆக்கினேய பகுதியில் (தென்கிழக்கு) கிணறு உள்ளது. அதை தற்சமயம் என்னால் மூட முடியாதே என்று வருத்தப்படுகிறவர்களுக்கும் இதே பதில்தான்.

எனக்கு இரண்டே இரண்டு ஆண் குழந்தைகள். மூத்தவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது. ஆனால், அவனது மனைவிக்கு எப்பொழுதும் மருத்துவச் செலவுதான் என்று புலம்புவார்கள் பலர் உண்டு. இவர்களின் வீடுகளில் ஆக்கினேயப் பகுதி துண்டிக்கப்பட்டிருக்கும். இது பெண்களின் பகுதி. இப்பகுதி துண்டிக்கப்பட்டதாலலேயே அந்த வீட்டில் மருமகளாக வந்த பெண்ணின் உடல்நலம் பாதிக்கப்படும். இது போன்றவர்களுக்கும் பெண் நாயே சிறந்தது.

ஆண் நாய்களை யார் வளர்க்கலாம்?

உங்கள் வீடோ, மனையோ ஆண்கள் பெயரில் இருந்து, ஈசானியம் மற்றும் வாயவியங்கள் திறந்திருந்து பெரிய அளவில் வாஸ்து கோளாறுகள் இல்லாமல் இருந்தாலும் ஆண் நாயை வளர்க்கலாம்.

Tuesday, September 17, 2013

செல்வ வளம் நல்கும் பதிகம்



தலம்: திருவீழிமிழலை பண்: குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்

வாசி தீரவே காசு நல்குவீர்
மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே
இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே
செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே
நீறுபூசினீர் ஏறதேறினீர்
கூறுமிழலையீர் பேறும் அருளுமே
காமன்வேவஓர் தூமக்கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே
பிணிகொள் சடையினீர் மணிகொள்மிடறினீர்
அணிகொள் மிழலையீர் பணிகொண்டருளுமே
மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே
அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே
அயனு மாலுமாய் முயலு முடியினீர்
இயலு மிழலையீர் பயனும் அருளுமே
பறிகொள் தலையினார் அறிவதறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழிமிழலைமேல் தாழும் மொழிகளே.
திருச்சிற்றம்பலம்

மேற்கண்ட பதிகத்தை தினமும் சொர்ண பைரவர் அல்லது கல்யாண சுந்தரர் பெருமான் படத்தின் முன்பு 33 முறை பாராயணம் செய்து வர பெரும் பணப்பிரச்சனைகள் தீரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும். செய்யும் தொழிலில் சுணக்கம் வராது. பணமுடை இராது.

முதலில் குலதெய்வத்தை வணங்கவும். பின்பு விநாயகரை வணங்கவும். அதன் பின்பு உங்களின் இஷ்ட தெய்வத்தை வணங்கவும். பிறகு சிவபெருமானை வணங்கவும். திருச்சிற்றம்பலம் என்று கூறி பின்பு பதிகத்தை பாடவும். பாடி முடித்தவுடன் திருச்சிற்றம்பலம் என்று கூறி முடிக்கவும். முதலில் ஆரம்பிக்கும் நாள் தேய்பிறை அஷ்டமியாக இருத்தல் மிகவும் நன்று.

மேற்கண்ட பதிகத்தை பாடும் போது இறைவனுக்கு எவ்வித படையல்களும் தேவையில்லை. இலுப்பை எண்ணெய் தீபம் இரண்டு மட்டும் போதுமானது. ஏனெனில் பதிகங்கள் படையல் பொருட்கள் மற்றும் வேள்விகள் செய்யாமலே நமது விருப்பங்களை இறைவனிடம் எடுத்துரைக்கக்கூடியவவை.

படையல் பொருட்கள் மற்றும் வேள்விகள் இவற்றிற்கு தான் மந்திரம் தேவை. மந்திரங்கள் தான் படையல்கள் மற்றும் வேள்விகள் மூலம் நமது விருப்பங்களை இறைவனுக்கு எடுத்துரைக்கக்கூடியவை.

இப்பதிகத்தை திருஞானசம்பந்தர் திருவீழிமிழலை என்னும் தலத்தில் பாடி இறைவனிடமிருந்து படிக்காசு பெற்று, அப்பொற்காசுகளை விற்று பஞ்சத்தில் இருந்த மக்களுக்கு உணவளித்து வந்தார். படிக்காசு பீடம் ஒன்று விநாயகர் சந்நிதி முன்பு காணப்படுகிறது. இந்த விநாயகர் படிக்காசு விநாயகர் என்றே அழைக்கப்படுகிறார்.

நாமும் தினமும் இப்பதிகத்தை பாடி எல்லா வளங்களையும் பெறுவோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ!!!

நன்றி:ஆன்மீகச்சுடர் வலைப்பூ

Wednesday, September 11, 2013

அறுபத்து நான்கு கலைகள்

1. அக்கர இலக்கணம் = எழுத்திலக்கணம் பற்றி அறிந்து கொள்வது,
2. இலிகிதம் = கடிதம் எழுதும் வகைகளை அறிவது
3. கணிதம் = கணக்கு வகைகளைப்பற்றிய நூலறிவு,
4. வேதம் = ரிக். யஜூர். சாமம். அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களைப் பற்றிய அறிவது.
5. புராணம் = பதினெண் புராணங்களை பற்றிய விளக்கங்கள் கற்று அறிவது
6. வியாகரணம் = மொழி மற்றும் நுண்கலைகளின் இலக்கண நூலறிவு
7. நீதி சாஸ்திரம் = சுக்கிர நீதி, மனுநீதி போன்ற சாஸ்திரங்களின் அறிவு
8. சோதிட சாஸ்திரம் = வான சாஸ்திரம், கோள்கறின் சஞ்சாரம் முதலியன கற்று பலன் சொல்லும் அறிவு
9. தரும சாஸ்திரம் = அற நூல்களை பற்றிய அறிவு
10. யோக சாஸ்திரம் = யோக நூல்களைப் பற்றிய கலைஞானம்
11. மந்திர சாஸ்திரம் = மந்திரங்களையும், உச்சாடனங்களையும் குருவின் மூலம் அறிந்து கொள்ளுதல்
12. சகுன சாஸ்திரம் = நன்மை, தீமை தருகின்ற நிமித்தங்களை பற்றிய சாத்திர நூலறவு மற்றும் கனவுகளின் பலன்கள்
13. சிற்ப சாஸ்திரம் = கருங்கற்களாலும், உலோகங்களாலும், மரம், மண் பிறவற்றாலும் செய்யப்படுகின்ற சிலைகளின் நுட்பமறிதல்
14. வைத்திய சாஸ்திரம் =
15. உருவ சாஸ்திரம் = மக்களின் உருவ அமைப்பு உச்சி முதல் உள்ளங்கால் வரையில் உள்ள உறுப்புகளின் அமைப்பு, உள்உருவ அமைப்பு ஆகியவற்றை அறிந்து கொண்டு மக்களின் குணம், செயல்களை ஆராய்ந்து கூறும் சாமுத்ரிகா லட்சணம் போன்ற நூலறிவு
16. இதிகாசம் = பாகசதம், சிவரகசியம், பாரதம், இராமாயணம் ஆகிய நூலறிவு
17. காவியம் = காவிய இலக்கணம் முப்பத்தெட்டு அறிந்திருத்தல்
18. அலங்காரம் = உவமை, உருவகம் முதலிய அணி வகைகளை கூறும் அலங்கார சாத்திர ஞானம்
19. மதுர பாடனம் = வாயினால் இனிமையாக பாடும் இசை ஞானம்
20. நாடகம் = கதை, கற்பனை நிகழ்ச்சிகளையும் பல பாத்திரங்களின் வாயிலாக மக்களுக்கு மேடை நாட கலையறிவு
21. நிருத்தம் = எழுத்தின் ஒலியே தெய்வம் என்று கொள்ளும் வாதிகள் புனைந்த நூல் பற்றி அறிவது.
22. சத்தப் பிரமம் = எழுத்தின் ஒலியே தெய்வம் என்று கொள்ளும் வாதிகள் புனைந்த நூல் பற்றி அறிவது
23. வீணை = வீணை போன்ற இசைக்கருவிகளை வாசிக்கும் அறிவு பெறுதல்
24. வேணு = மூங்கிலால் செய்யப்பட்ட புல்லாங்குழல் வாசிக்கும் இசை ஞானம்
25. மிருதங்கம் = தோல் கருவியாகிய மிருதங்கத்தில் சொற்கட்டுகளை தாள ஞானத்தோடு வாசிக்கும் கலை.
26. தாளம் = ஆதி ரூபகம், திருபுடை சிம்மநந்தனம் போன்ற 108 தாள, பேதங்களை அறிந்து, சங்கீத ஸ்ருதி பிரமாணம், அங்கம் இலயை, களை, காலம், கிரகம், கிரியை, சாதி பிரத்தாரம், மார்கம். மதி என்ற கூறுபாடுகளை பற்றிய தாள ஞானம்
27. அஷ்திர பரீட்சை = ஹஸ்த்ர பரீக்ஷை  வில்லில் வைத்து எய்யப்படும் அம்புகளின் தன்மை அமைப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ளும் அறிவு, மந்திரம் கூறி அம்புகளை எய்யும் நுண்ணறிவு
28. கனக பரீட்சை = ஆடகம், சாம்பூநதம், சாதரூபம், கிளிச்சிறை ஆகிய பொன்னின் மாற்று வகைகளை அறிந்துகொள்ளும் அறிவு
29. இரத பரீட்சை = தேர்களின் தட்டமைப்பு, அளவு மரம், அலங்காரம், கூம்பு, சக்கர அமைப்பு முதலியவற்றை பற்றி தெரிந்து கொள்ளும் அறிவு
30. கஜ பரீட்சை (அகம் – புறம்) = யானைகளின் தோற்றம், உருவ அமைப்பு, லட்சணம், குணம், திறமை முதலியவற்றை கண்டறிதல். குண்டலியின் தோற்றம் அதன் அரு-உருவ அமைப்பு, அதன் குணம், வேகம் முதலியவற்றை கண்டறிதல்
31. அசுவ பரீட்சை = குதிரைகளுக்கு ஏற்படும் நோய் வகைகளையும், நோய் தீர்க்கும் முறைகளையும் அறிதல். மேலும் அகக்குதிரையாகிய சுவாசத்தின் பேதங்களை அறிந்து வசமாக்குதல்
32. இரத்தின பரீட்சை = நவரத்தினங்களின் குணம் குற்றம், அவற்றை அணிவதால் எற்படும் பலன்கள் ஆகியவற்றை ஆராய்ந்து அறியும் அறிவு
33. பூமி பரீட்சை = மண் வகைகளின் தன்மை, கல்லின் தன்மை, நீரோட்டம் ஆகியவற்றை அறிதல் (ஜியாலஜி)
34. சங்கிராம இலக்கணம் = போர்பற்றிய விவரங்களையும், போர்களத்தில் வியூகம் வகுக்கும் முறைகளையும் கற்றுணர்தல்
35. மல்யுத்தம் = வீரர் இருவர் ஒருவரோடு ஒருவர் ஆயுதம் இன்றி போர்புரியும் கலை
36. ஆகருடணம் = ஆகர்ஷணம் என்பது பிறரையும், பிறவற்றையும் தன்னைநோக்கி அல்லது தான் விரும்பும் இடத்திற்கு இழுக்கும் மந்திர வித்தை. ஆகர்ஷணம் என்பது- 1. ராஜ ஆகர்ஷணம், 2. ஸ்திரி ஆகர்ஷணம் 3. புருஷ ஆகர்ஷணம் 4. மிருக ஆகர்ஷணம் 5. சத்ரு ஆகர்ஷணம் 6. மித்ரு ஆகர்ஷணம் 7. தேவதா ஆகர்ஷணம். 8. பஞ்சபூத ஆகர்ஷணம் என்று எட்டு வகைப்படும்.
37. உச்சாடணம் = மந்திர உச்சரிப்பு முறைகளால் பஞ்சபூதங்களால் ஆன என்ற ஒன்றிற்கும், பிறர்க்கம் தான் நினைக்கிற ஒன்றை ஏற்றுதல் அல்லது  யிரேற்றல் உச்சாடணம் என்பது. 1. ராஜ உச்சாடணம், 2. ஸ்திரி உச்சாடணம் 3. புருஷ உச்சாடணம் 4. மிருக உச்சாடணம் 5. சத்ரு உச்சாடணம் 6. மித்ரு உச்சாடணம்.  7. தேவதா உச்சாடணம் 8. பஞ்சபூத உச்சாடணம் என்று எட்டு வகைப்படும்.
38. வித்து வேடணம் = அடங்காதவரையோ, அடங்காத விலங்குகளையோ அவர்களுக்குள் விரோதம் ஏற்படச் செய்து அடக்குதல். பஞ்ச பூதங்களுக்குள் விரோதத்தை ஏற்படுத்தி மழை, புயல் மற்றும் இயற்கை சீற்றங்களை உண்டாக்குதல்.  வித்து வேடணம் என்பது – 1. ராஜ வித்து வேடணம் 2. ஸ்திரி வித்து வேடணம் 3. புருஷ வித்து வேடணம் 4. மிருக வித்து வேடணம் 5. சத்ரு வித்து வேடணம் 6. மித்ரு வித்து வேடணம் 7. தேவதா வித்து வேடணம் 8. பஞ்சபூத வசியம் என்று எட்டு வகைப்படும்.
39. மதன சாத்திரம் = காம விளையாட்டை பற்றி கலை நூல்கள்
40. மோகனம் = பிறர் மனத்தை மயக்க செய்தல், பிற விலங்கினங்களை தான் விரும்புகின்ற வழியில் மோகிக்க, மயக்க செய்தல். மோகனம் என்பது – 1. ராஜ மோகனம் 2. ஸ்திரி மோகனம் 3. புருஷ மோகனம்            4. மிருக மோகனம் 5. சத்ரு மோகனம் 6.மித்ரு மோகனம் 7. தேவதா மோகனம் 8. பஞ்ச பூத மோகனம் என்று எட்டு வகைப்படும்.
41. வசீகரணம் = பிறரை, பிற விலங்குகளை, பஞ்சபூதங்களை தன் கருத்திற்கு உடன்பட செய்யும் வித்தை. வசியமானது. 1. ராஜ வசியம் 2. ஸ்திரி வசியம்  3. புருஷ வசியம் 4. மிருக வசியம் 5. சத்ரு வசியம் 6. மித்ரு வசியம்  7. தேவதா வசியம் 8, பஞ்பபூத வசியம் என்று எட்டு வகைப்படும்.
42. இரச வாதம் = இரும்பு, செம்பு போன்ற தாழ்ந்த உலோகங்களையும், மண்ணையும் பொன்னாக மாற்றுதல்
43. காந்தருவ வாதம் = தலைவன் தலைவியை சந்தர்வ மணத்தால் கூடுவதற்கு பேசும் பேச்சுக்கலை.
44. பைபீல வாதம் = எறும்புகள் போன்ற ஜீவராசிகளின் பேச்சுக்களை அறிகின்ற கலை.
45. கவுத்திக வாதம் = கவுத்திக வாதம் என்பது வஞ்சத்தை மனதில் வைத்து வாதாடும் கலை
46. தாது வாதம் = பொன், இரும்பு, செம்பு துத்தநாகம் போன்ற அனைத்து உலோகங்களின் தன்மையறியும் கலை.
47. காருடம் = தன்னை கருடனாக பாவித்து பாம்பின் விஷத்தை எடுக்கும் மந்திர வித்தை.
48. நட்டம் = மேடையில் ஆடும் கூத்தின் கலை தெருக்கூத்துக்கள்
49. முட்டி = விரல்களை மடக்கிய கையினால் குத்துச்சண்டை போடுகின்ற போர்கலை அதாவது முட்டித்தம்
50. ஆகாயப் பிரவேசம் = ஸ்தூல சரீரத்தை யோக வித்தையால் மறைத்துக் கொண்டு சூட்சும சரீரத்தோடு ஆகாயத்தில் நுழைதல்.
51. ஆகாய கமனம் = சூட்சும சரீரத்தோடு ஆகாய மாக்கமாக பல இடங்களிலும் சஞ்சரித்தல்.
52. பரகாய பிரவேசம் = தன் சரீரத்தை விட்டு பிறிதொரு சரீரத்தினுள் சூட்சும சரீரத்தோடு புகுதல்.
53. அதிரிசயம் = காணப்படும் பொருள்களை காணாமற் போகும்படி செய்கின்ற அதிசய வித்தை.
54. இந்திர ஜாலம் = அற்புதங்களை செய்து காட்டும் வித்தை.
55. மகேந்திர ஜாலம் = நம்ப முடியாத பெரிய மாய வித்தைகளை செய்து காட்டும் வித்தை.
56. அக்கினி தம்பம் = நெருப்பு தனது உடலை சுடாது செய்யும் வித்தை.
57. ஜலத்தம்பம் = நீரின் மேல் நடந்து காட்டும் வித்தை.
58. வாயுத்தம்பம் = பிராண வாயு வெளியில் ஓடாமல் தடுத்து நீண்ட நேரம் அடக்கி சாதிக்கும் ஹடயோக வித்தை
59. சமையல் கலை =
60. வாக்குவாதம் = பிறர் பேச்சை பேச ஒட்டாமல் தடுக்கும் வாய்க்கட்டு வித்தை
61. சுக்கிலத்தம்பம் = இந்திரியத்தை வெளிவிடாது அடக்கம் வித்தை.
62. கன்னத்தம்பம் = காதை கேட்காமல் செய்யும் வித்தை
63. கட்கத்தம்பம் = கத்த போன்ற கூர்மையான பொருட்களால் வெட்டுபடாது உருவிலயாக மாறுகின்ற கலை.
64. அவத்தைப் பிரயோகம் = பகைவரை  ஸ்தம்பன, பேதன, மாரண அஷ்டகர்ம பிரயோகங்களை அறிந்து பில்லி, சூனியம், ஏவல் வைத்து அடிமையாக்குதல், மாரணம் செய்தல் மற்றும் கொடிய விலங்குகளின் பல்லி, சூனியம் வைத்துக் கொல்லுதல்.

Thursday, September 5, 2013

ஆழ் மனதின் அற்புத சக்திகள் - 4

ஆழ் மனதின் அற்புத சக்திகள் நீங்கள் ஒரு தொழிலைச் செய்ய எண்ணும் போது என்ன மனப்பாண்மையில் ஈடுபடுகிறீர்களோ, அதற்கேற்ப உங்கள் செயல் வெற்றி - தோல்வியை அடைகிறது, வெற்றி மனப்பான்மையுடன் செயல் பட்டால் வெற்றியும், தோல்வி மானப்பான்மையுடன் தன்னம்பிக்கையற்று செயல்பட்டால் தோல்வியையும் அடைகிறீர்கள், ஆகவே வெற்றியும், தோல்வியும் உங்கள் மனப்பான்மையிலிருந்து உருவெடுக்கிறது, மன்ப்பான்மை என்பது, உங்கள் உள்ளத்தில் தொடர்ந்து நிலைபெறும் சிந்தனைதான் மனப்பான்மையாக மாறுகிறது, வெற்றி என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் மனச்சித்திரங்களே வெற்றி சிந்தனை , இது மீண்டும் மீண்டும் பதிவாகும் போது வெற்றி மனப்பான்மையாகமாறுகிறது, நீங்கள் விரும்பினால் மனச்சித்திரத்தை மாற்றி ஆழ் மனம் (இதனை சமயோசித அறிவாகக் கொள்ளலாம்) கட்டளை உஙகளுக்கு கைகொடுக்கும், ஆழ்மனக் கட்டளை மூலமும், மனச்சித்திரங்கள் மூலமும் வெற்றி மனோபாவத்தை உருவாக்கிட முடியும், நீங்கள் ஆழ்மனச்சக்தியை பெருக்கி கொண்டால் உழைப்பில் பத்தில் ஒருபங்கு குறைந்தாலும், விளைவு பத்து மடங்காக உயர்ந்திட முடியும், கடும் உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்பதை ஆழ்மனத்திற்கு ஈடு இணை இல்லை என்ற புது பழமொழியை புரிந்து கொள்ளலாம், ஆழ்மனதை ஒரு தேவதை என்றே கூறலாம், அது ஆற்றல் மிக்க தேவதை, உங்களுக்கு விசுவாசமான தேவதை. நீங்கள் கேட்பதை பெற்றுத தரும் சக்தி உண்டு,ஆக அது தேவதையோ, அரக்கனோ என்பது நீங்கள் கொடுக்கும் கட்டளையைப் பொருத்தது. உங்கள் கட்டளையின் எண்ணம் முறன்பாடானால் கிடைப்பதும் முறன்பாடாகவே அமையும், உங்களின் ஆழ்மனச்சக்தி பெருகி விட்டால் நீங்கள் நினைத்ததை விரும்பியவாறு அடைய முடியும். இதன் கருத்தை கொண்டே ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு " Positive thinking always ever success Nagative thinking always never success" எவராயினும், எந்நிலையிலும், ஆழ்மனக்கட்டளையை நம்பிககையோடு கொடுத்து அடையப்போகிறோம் என்னும் விசுவாசத்தை வளர்த்து நினைத்ததை நினைத்தபடியே அடைய முடியும். வேண்டியதை விரும்பியபடியே பெற முடியும். ஒரு குறிக்கோளுக்கான கட்டளையை மட்டும் தேர்வு செய்து கொள்ள வேண்டும், மற்ற விருப்பு வெறுப்பு ஆசைகளை விலக்கி வைத்துவிட்டு, உறங்குவதற்கு முன் படுக்கையில் சம்மனமிட்டு - தியானத்திற்கு அமர்வது போன்று - சுவாசத்தில் ஆழ்மனதை முழுவதையும் கவனத்தில் குவித்தால் எண்ண அலைகள் அடங்கும், நீங்கள் தேர்ந்தெடுத்த ஆழ்மனக்கட்டளையை உணர்ச்சியுடன் , ஒலி நயத்துடன், உதட்டசைவுடன் உருவேற்றுக. உங்கள் குறிக்கோள் நிறைவேறி விட்டது போன்ற நிலையை மனச்சித்திரமாக கற்பனையில் காண்க. இதனை உறங்குவதற்கு முன்பும், உறங்கி எழுந்த பின்னும் தினமும் 30 நிமிடங்கள் கட்டளை கொடுத்தால், உங்கள் ஆழ்மனம் அற்புதமாக செயல்பட தொடங்கிவிடும். ஆழ்மனம் என்பது ஐம்புலங்களால் அறிய இயலாது ஆனால் அதன் விளைவை ஐம்புலங்களால் அறிய முடியும், நிறைவேற போகிறது என்ற நம்பிக்கையுடன் கட்டளை கொடுங்கள். அப்போது ஆழ்மனத்தின் அற்புத சக்தி வெளிப்படும். ஆழ்மனக்கட்டளையை குறிக்கேளுக்கும். தேவைக்கு தக்கபடி நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். உருவாக்கிய கட்டளைகளை உங்களை சுயகருத்தேற்றம் செய்யும் போது வெற்றி உங்களை அடையும். நம் வாழ்க்கை என்பது நம்எண்ணத்தால் உருவாக்கப்படுகிறது. எண்ணத்திற்கேற்ப வாழ்க்கை. எண்ணம் என்பது தொடர்மன சித்திரமே. எணணம் - செயல் ஆகிறது, செயல் - பழக்கம் ஆகிறது, பழக்கம் - வழக்கமாகிறது. வழக்கம் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. ஆழ்மனக்கட்டளை , மனச்சித்திரம் இவ்விரு உத்திகளையும் ஒரே சமயத்தில் தொடர்ந்து பயன்படுத்தும்போது உங்கள் மனோசக்தி பெருக்கம் அடைகிறது. சிந்தனையிலிருந்து - செயல் பிறக்கிறது. மனத்தின் எண்ணமே செயலுக்கு ஊக்கம் . எண்ணம் திண்ணம் பெறும்போது நிைன்த்ததை அடைய வெற்றியாக முடிகிறது. ஆழ்மனக்கட்டளையும. மனச்சித்திரமும் சேர்ந்தது தியானம் - தியானம் தவம் எனப்படுகிறது. தவ வலிமையால் நம் முன்னோர்கள் நம்ப வியலாத அற்புதமான சாதனைகளை செய்ததனர் என்பதை நாம் அறிவோம். ஆழ்மன கட்டளை கொடுக்கும்போதே அதற்கேற்ப மனச்சித்திரம் வரைவதன் மூலம் நீங்கள் அற்புதங்களை நிகழ்த்துபவராக மாறிவிடுகிறீர்கள். உங்களின் நீண்டகால குறிக்கோள்களான தியானம் செய்யும் போது உங்களது நம்பிக்கை ஒரு மந்திர சக்தியாகவே பெருக்கெடுக்கிறது. எனவே ஆழ்மன சிந்தனை - தியானம் மூலம் வெற்றி நிச்சயம்