Monday, October 27, 2014

உலகை வெற்றி கொள்வீர்

                   

1. ‘உங்கள் மனதை வெற்றி கொண்டால் உலகை வெற்றி கொள்வீர்’ என்பது முது மொழி. இதைத் தான் ஆயிரம் படைகளை வென்றவனை விட தன்னை வென்றவனே உயர்ந்தவன் என்றார் புத்தர். மனிதனுக்கு வெளி உலகை வெல்வதை விட தன் உள் மனதை வெல்வது தான் சிரம மானது.

2. உலகில் இரண்டு சக்திகள் உண்டு.ஒன்று ஆக்கபூர்வ சக்தி. மற்றொன்று எதிர்மறை சக்தி. ஆக்கபூர்வமாக நினைத்து செயல்படும் பழக்கம் வந்து விட்டால் எல்லா எதிர்மறை சக்திகளும் பலமிழந்து விடும்.

3. காலை விடிந்ததும் நமக்கு இரண்டே வாய்ப்புகள்.ஒன்று மகிழ்ச்சியாக செயல்படுவது. மற்றொன்று சோகமாக செயல்படுவது. எதைத் தேர்வு செய்வது என்பது நம்கையில் தான்.

4. நாம் பழகுகின்ற மனிதர்கள் நம்மை ஊக்கு விப்பவரா? குறிக்கோளை அடைய உதவுபவரா?

நம்மீது உண்மையான ஆர்வம் உள்ளவரா?

இம்மூன்றுக்கும் ‘ஆம்’ இருந்தால் அவரிடம் ஆலோசனை கேட்கலாம். அல்லது குறைந்தபட்சம் நம்மைப் பின்னோக்கிதள்ளாதவராகஇருக்கவேண்டும்.

5. நாகரீக உலகில் மனிதர்களை திசை மாற்ற எண்ணற்ற சாதனங்கள். பொழுது முழுதும் தொலைக் காட்சி பார்ப்பவர்கள், மணிக் கணக்கில் தொலைபேசியில் பேசுபவர்கள் சாதனைகளைப் படைக்க முடியாது.

6. உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் நிறைத்து வழங்குவது குழந்தைப் பருவம். தண்ணீரில் நீந்துதல், படகு ஒட்டுதல், மலையேறுதல், விளையாடுதல், ஆடிப்பாடுதல், சிரித்து மகிழ்தல் போன்ற சாகசங்கள் நம்முள் உள்ள குழந்தைத் தன்மையை வெளிக்கொணர்ந்து புத்துணர்வைஉண்டாக்கும்.

யாருடன்தொடர்பு?

7. உயர் நெறியாளர்களின் தொடர்புகளை எப்படியேனும் உருவாக்கி கொள்ள வேண்டும். பலவருட அனுபவங்களால் கற்றுக் கொண்டயுக்திகளை ஒரு சில நிமிடங்களில் பகிர்ந்து கொடுப்பார்கள். இது தான் சிறந்த முதலீடு.

8. வியாபாரத்தில் பெரும்பாலான விற்பனைகள் முதல் மூன்று நிமிடங்களில் முடிவு செய்யப்படுகின்றன. ஒரு மனிதரைப் பற்றிய அபிப்பிராயமும் சந்திப்பின் முதல் சில நிமிடங்களில் உண்டாகி விடும். மனிதர்களைச் சந்திக்கும் போது இன் முகத்தோடு வரவேற்பது, உறுதியாக நிற்பது, கண்களை நேருக்கு நேராக பார்ப்பது, நிதானமான சுவாசம், அமைதியான செயல்பாடு – போன்றவற்றின் மூலம் நம்மைப் பற்றிய உயர் அபிப்பிராயம் உண்டாகும்.

9. சூரியன் உதிக்கும் முன்னர் எழுந்து விடுங்கள்.வாழ்க்கை ஒளிமயமாகி விடும் என்பது உண்மை. அதிகாலையில் நம் உடலில், மனதில் சக்திகளின் ஆற்றல் அதிகமாக இருக்கும். நேரம் செல்லச் செல்ல அதன் வீரியம் குறையும். இதனால் தான் அதிகாலையில் எழுபவனை வெல்வது கடினம்.

10. ஒவ்வொரு மனிதனுக்கும் நான்கு வகை வாழ்க்கை

* தனிமனித வாழ்க்கை

* குடும்ப வாழ்க்கை

* தொழில் வாழ்க்கை

* சமூக வாழ்க்கை

இந்த நான்கிலும் அதற்குரிய பங்களிப்பு இருந்தால் தான் முழுமையான வாழ்க்கை.

11. எமர்சன் சொன்னார்: அடிக்கடி சிரிப்பது, அதிகமாக நேசிப்பது, உயர்ந்த மனிதர்களின் மரியாதைக்குப் பாத்திரமாவது, குழந்தைகளின் அன்பைப் பெறுவது, நேர்மையான விமர்சனங்களை ஏற்பது, அழகைப் பாராட்டுவது, ஆரோக்கியமான குழந்தையைப் பெறுவது, சமுதாய உயர்வுக்காக ஒரு சில பங்களிப்பு மற்றும் ஆடிப்பாடி மகிழ்ச்சியோடு வாழ்ந்ததால் ஒரு ஆத்மாவாக சுகப்பட்டது என்பதை அறிந்தால் அதுவே வெற்றி.

வெற்றிமனம் :

12. சரியான மனநிலை கொண்ட ஒரு மனிதனை எந்த சக்தியாலும் அவனுடைய குறிக்கோளை அடைவதிலிருந்து தடுக்க முடியாது.அதேபோல தவறான மனநிலையோடு இருப்பவனுக்கு உலகின் எந்த சக்தியாலும் உதவ முடியாது – என அறிஞர் சொன்னதைப் போல சரியான மனநிலையே வெற்றியை அடைய உதவும்

13. மனிதன் வாழ்வதும் அழிவதும் அவனாலேயே. சரியான சிந்தனை, செயல் மூலம் உயர்கின்றான். தீயசிந்தனை, செயல்களால் தாழ்வடைகின்றான். உயர்ந்த மனிதரின் நற்பண்புகள்: தெளிந்த சிந்தனை, சுயக் கட்டுப்பாடு, உணவில் கட்டுப்பாடு, உணர்ச்சிகள் மீது ஆளுமை, வெற்றித் தோல்விகளில் சமமான மனநிலை, விடா முயற்சி ஆகியவை.

மேலும் இம்மாத இதழை இ புத்தக வடிவில் படிக்க;http://ci.magzter.com/IN/Thannambikkai/Indrayamaruthuvam/Health/38365

No comments:

Post a Comment