Sunday, June 15, 2014

"இலட்சியக் கனவு காணுங்கள்"

கனவுகள் மிகவும் ஆற்றல் மிக்கவை. உங்களின் ஆழ்மனதில் நிழலாடும் காட்சிகள் கனவுகளாகின்றன. மேலும் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி மனதில் வெள்ளோட்டம் பார்க்க வெண்டும்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு உங்கள் தொழில் வாழ்க்கையில் எந்த நிலையை அடைந்திருக்க வேண்டும் என்றும், குடும்ப வாழ்க்கையில் எந்த நிலைக்கு உயர்ந்திருக்க வேண்டும் என்றும், சமுதாய சேவையில் நீங்கள் என்னென்ன சாதித்து இருக்க வேண்டும் எனவும் உங்கள் மனதில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு எண்ணிப் பார்த்து, மனக்காட்சிகளை வரைய வேண்டும். இவ்வாறு மனச்சாட்சிகளை வரையும் போது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் உங்கள் இலட்சியக் கனவுகள் பதிவாகின்றன. பின்னர், அப்பதிவுகளே உங்களை இயக்கும் ஆற்றலாகவும் மாறிவிடுகிறது.

இவ்வாறு உள்ளத்தில், ஆற்றலும் இலட்சிய வேட்கையும் ஊற்றெடுத்துக் கொண்டே இருப்பதால் உங்களுக்கு வாழ்வில் சலிப்புத் தோன்றாது.அத்தோடு மனச்சோர்வோ, மனத் தளர்வோ ஏற்படாது.முகத்தில் மலர்ச்சியும், செயலில் உத்வேகமும், சொல்லில் தெளிவும் தோன்றிவிட்டால் உங்கள் செயலில் வெற்றி மலர்ந்து விடும்.

No comments:

Post a Comment