Wednesday, June 11, 2014

வாழ்க வளமுடன்

    "வாழ்த்தும் போது 'அமைதி நிலையில்' 'தெய்வீக நிலையில்' இருந்து கொண்டு வாழ்த்த வேண்டும். வாழ்த்து வீண் ஆகாது. "வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்" என்று சொல்லச் சொல்ல உடல் நன்றாக இருக்கும், மனம் நன்றாக இருக்கும். நம்மைச் சுற்றிலும் ஒரு நல்ல அலை இயக்கம் இருக்கும். நாம் போகுமிடமெல்லாம் நன்றாக இருக்கும். தியானம் செய்த பின், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து மாலை வரையில் இருபத்தைந்து தடவை வாழ்த்தினால் ஒரு மாதத்திலேயே குடும்பத்தில் நல்லபடியான சூழ்நிலை உருவாவதைக் காணலாம். இந்த முறையில் வாழ்த்தின் மூலம் உலகத்தையே மாற்றி அமைத்துவிடலாம். நமக்குத் தீமை செய்தவரையும் ஏன் வாழ்த்த வேண்டும் என்றால், நம்முடைய கர்மச்சுமையின் விளைவு அவரைத் தீமை செய்ய இயக்கியது, எனவே அவர் செய்தார். அவர் அறியாமையினாலேதான் அவ்வாறு செய்தார். அவருக்கு உள்ளாக இயங்கிக் கொண்டிருப்பதும் எல்லாம்வல்ல முழுமுதற் பொருளே. எனவே, அவரை மனதார வாழ்த்தி எனது தீய பதிவு ஒன்றை அகற்ற உதவிய அவருக்கு நன்றியும் செலுத்துவேன்.' என்ற தத்துவ விளக்கம் நம் செயலுக்கு வந்து அதுவே இயல்பாகிவிட்டதென்றால், நாம் ஆன்மீகப் பாதையில் திடமாக முன்னேறிச் செல்கிறோம் என்பதற்கு அதுவே அறிகுறியாகும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment