Wednesday, October 9, 2013

செல்வம் தரும் திருமண்


ஆண்டாள் அவதரித்த துளசி தோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்றும் உள்ளது. இங்கும் ஆண்டாளுக்கு ஒரு சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியின் முன்னால் துளசி மாடம் உள்ளது. இதில் இருக்கும் மண்ணை பக்தர்கள் சிறிதளவு எடுத்து கொள்கிறார்கள்.

இந்த மண்ணை வீட்டில் வைத்தால் தேவையான நேரத்தில் தேவையாக செல்வம் கிடைக்கும் என நம்புகின்றனர். சிலர் இந்த மண்ணை நெற்றியிலும் பூசிக் கொள்கிறார்கள். மாடத்தின் அடிப்பகுதியில் ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment