Friday, August 30, 2013

மந்திரங்கள் எப்படி செயல்படுகின்றன?


மந்திரங்கள் எப்படி பலன் தருகின்றன?

இந்த வலைப்பூவை இப்போது நீங்கள் வீட்டில் உள்ள உங்களது மடிக்கணினியிலோ(லேப்டாப்),அல்லது இணையதள மையத்திலோ(பிரவுசிங் சென்டரிலோ)வாசிக்கிறீர்கள்.இந்த இடத்தில்
செல்போன் அலைகள் இருப்பது நிஜம்தானே?  செல்போன் அலைகள் 24 x 7 என்ற அளவில் பரவிக்கொண்டே இருக்கின்றன. அதற்குரிய செல்போன் நாம் வாங்கி இயக்கத்தில்(on செய்து) வைத்திருந்தால் நமக்கு மற்றவரின் அழைப்பு வருகிறது.அதே போலத்தான். நாம் குழந்தையாக பிறந்தது முதல் 9 கிரகங்களின் கதிர்வீச்சு நம் மூளையை விண்வெளியிலிருந்து
வந்தடைந்து கொண்டே இருக்கின்றன. இத்தனாம் வயதில் இது நிகழும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது.ஒரு எதிர்பாராத பிரச்னை அல்லது விபத்திலிருந்து தப்பிப்பதற்கு மந்திர ஜபம் அல்லது குறிப்பிட்ட சித்தர் வழிபாடு அல்லது மகான் வழிபாடு அவசியமாகிறது.ஒரு மந்திரம் உள்ளது.

ஓம் சர்வ சர நமச்சிவய நம(சிவாய அல்ல)

இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால் நமது வீண் செலவுகள் குறையும் என மகான்கள் கூறியுள்ளனர்.நாம் தினமும் 30 நிமிடம் நமது வீடு/அலுவலகம்/ட்டை மாடியில் காலையிலும் மாலையிலும் இந்த மந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஜபித்துக்கொண்டே  இருக்கிறோம். என்னாகும்?100 ஆம் நாளிலிருந்து நமது செலவுகள் குறையும்.வருமானம் மிச்சமாகும்.
எப்படி?
நமது மூளையில் இந்த மந்திர அதிர்வுகள் பதிவாகும்.அந்த பதிவுகள் நவக்கிரக அலைகளில் ஒரு பாதிப்பை உருவாக்கும்.நமது தலைக்குமேலே சுமார் ஆயிரம்கிலோமீட்டர்கள் உயரத்தில் மந்திர
அலைகளுக்கான அடுக்கு உள்ளது.அங்கு நமது தினசரி ஜபம் 100ஆம்
நாளில் போய் வேலை செய்து நமது நம்பிக்கையை நிஜமாக்கும்.ஒவ்வொரு மனிதனும் சுயமாகஉணரமட்டுமே முடியக்கூடிய
விஷயங்களில் ஒன்று இது:

கொலை, கொள்ளை, கற்பழிப்பு,ஏமாற்றுதல்,
பொய் சொல்லுதல் இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம்
என சாஸ்திரங்கள் கூறுகின்றன.இதனால் ஏற்படும்
பாவங்களால் நமது முன்னேற்றம் தடைபடுகிறது.
இதை நீக்க ஒரு சிவ மகாமந்திரம்:

ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்

இந்த மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை பழமையான
சிவன் கோவிலில் ஜபித்தால் நாம்- அதாவது நமது
கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய
நமது அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள்
7
தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்தபாவங்கள்
உடனே நீங்கிவிடும்.

No comments:

Post a Comment